எந்தையும் தாயும் குலாவிய
இந்தத் தாய கத்தை
உன் தாயகமாக நீ
ஒப்புக் கொள்ள வில்லை !
உன் மூதாதையர்
உதிப்பகம் என்றாலும் !
ஒருதாய் மக்கள் நாமில்லை யென
நிரூபித்துக் காட்டினாய் !
பட்டொளி வீசும்
மூவர்ணக் கொடி வணங்கி
நாவிலே
வந்தே மாதரம் மந்திரச் சொல்
வரவில்லை !
இந்திய அடிமைகளை
விடுவித்த
முதல் சுதந்திர முழக்கம்
வந்தே மாதரம் !
விடுதலை பெற்ற மாந்தர்
மதத்துக்கு அடிமை !
அரிவாளும், சுத்தியும் ஓங்கிய
அன்னியக் கொடி
உன்னிரு கரத்தில் !
என் தாய் வேறா ?
உன் தாய் வேறா ?
ஒரு நாட்டில் பிறந்த நமக்கு !
என் வாய் வேறா ?
உன் வாய் வேறா ?
ஒரு மொழி பேசும் நமக்கு !
என் நிழல் வேறா ?
உன் நிழல் வேறா
ஒரு வீட்டில் சுற்றும் நமக்கு ?
இரு வாயிலும் ஒலிக்க வில்லை
ஒரு மந்திரக் குரல் !
எதிர்த் திசையில் போகும் நாம்
இந்த யுகத்தில்
அன்னிய ராகச் சந்தித்தோம் !
பிணைத்தவை சில !
பிடித்தவை சில ! ஆயினும்
பிரித்தவை பல !
ஒரு தாய் மக்களும்
இரு தாய்ப் பிள்ளையாய்ப்
சண்டை யிட்டோம் !
இரு தாய் மக்களை
இணைத்திடக் காந்தி
இரும்புப் பாலம் கட்ட முயன்றார் !
பிரிந்து, பிரிந்து
அந்நியராய்ப் போனோம்
சொந்த நாட்டிலே !
காலங் காலமாய்
ஆலயங்கள் கொள்ளை போயின !
மோனச் சிலைகள்
மூக்கறுபட்டு முலை அறுபட்டு
மானம் இழந்தன !
ஆக்ராவிலே
ஆகாவென்று எழுந்தது
தாஜ்மஹால் !
கஜினிஸ்தான் ஆவதை நிறுத்தும்
ஆங்கிலக்
காலனி ஆட்சி !
புத்துயிர் பெற்றெழும் பாரதம்
முக்கால் கண்டமாய் !
மூலவேர் மொகஞ்ச தாரோ
முகவரி அழிந்தது !
ஹரப்பா வரலாறு ஏடுகளைக்
கரையான் தின்றது !
சிலுவையில் அடிக்கப் பட்டது
சிந்து நதி நாகரீகம் !
இந்து பிரமிட் கோபுரம்
இடிக்கப் பட்டது !
வலுவில் லாத பாரதத்தில்
பளிங்குக் கொலு வாக
கறுத்துப் போவது தாஜ்மகால் !
*******
[S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 12, 2018] R-3
I’d have to set with you one this subject. Which is not something I typically do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!
You completed a few good points there. I did a search on the subject and found the majority of folks will have the same opinion with your blog.
I would name your blog the dreamland! While Santa knocks at our door just once per year, you blog is open the whole year – wow!
This is the first time I am reading this section. Good. V.P.Velu