காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் மையத்தில் அசுர வடிவில், பூர்வ அணுப்பிளவு உலை ஒன்று இயங்கி கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருக்கருவை இடையே மீள் பெருக்கும் வேகப் பெருக்கி அணு உலை ! உட்கரு உள்ளே கட்டுப் பாடுடன் இயங்கியும் நிறுத்தம் அடைந்தும் விட்டு விட்டு வேலை செய்வது ! வெளிக் கருவிலே கனல் குழம்பைச் சமைத்துக் கொதிக்க வைக்குது ! கனல் குழம்பு குவல யத்தைக் குத்தூசி போல் குடைந்து பீறிட்டெழும் எரிமலைகள் ! தாறு மாறாய் ஏறி, இறங்கி ஊர்ந்திடும் தாரணியின் குடல் தட்டுகள் ! அங்கிங் கெனாதபடி பொங்கிப் பீறிடும் பூதக் கனல் எரிமலைகள் ! நர்த்தனம் புரியும் புவித்தளம் ! அணு உலை வெப்ப மீறலைப் புவியில் தணிப்பவை அவை ! உட்கருவின் பூத அணு உலையின் மிச்ச எரிசக்தி அளவை இருபது ஆண்டுக்குள் கணித்து உறுதி செய்வார் !
++++++++++
புதிய உமர் கயாம்
நாலாயிரம் மைல் ஆழத்தில் பூமியின் உட்கருவில் ஐந்து மைல் விட்டத்தில் கோள வடிவில் யுரேனியம் & புளுடோனியம் எரிசக்தி உண்டாக்கும் பூத வேகப் பெருக்கி அணுக்கரு உலை இயங்கி வருவதற்கு வலுவான ஆதாரம் இருப்பதைக் கண்டறிந்தோம். அந்த அணு உலை இயங்கிடும் போது புதிய எருக்கருவையும் தொடர்ந்து ஈன்று பெருக்கிறது. அதனால் ஏற்படும் பெரு விளைவு என்ன வென்றால், அந்த அணு உலை ஒருநாள் எரிசக்தி பூராவும் தீர்ந்துபோய், நம்மைப் பாதுகாக்கும் பூகாந்தம் மறைந்து, உயிரினங்களும் ஒருங்கே மரித்துவிடும்.
மர்வின் ஹெர்ன்டான் [ Oak Ridge Researcher, USA]
பூமிக்கு தேவையான இன்றைய எரிசக்திக்கு உகந்த புவிக் கூட்டுக் கணினி மாடலை முன்னறிவித்த விஞ்ஞானிகளில் ஒருவனாக என்னைக் கருதுகிறேன். இப்போது யூகிப்புக் கோட்பாடுகளில்தான் இருக்கிறோம். இன்றைய நிலையில் அது சரியோ, தப்போ என்று நான் கவலைப்படப் போவதில்லை.
வில்லியம் மெக்டோனா [பேராசிரியர் பூதளவியல், மாரிலாண்டு பல்கலைக் கழகம்]
பூமிக்குத் தொடர்ந்து தேவைப்படும் பேரளவு எரிசக்தி
பாதுகாக்கும் பூகாந்தத் தேவைக்கும், எரிமலை, பூகம்ப அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] இயக்கத்துக்கும், பூமிக்குத் தொடர்ந்து எரிசக்தி ஊட்ட எருக்கரு [Fuel] அவசியமாகிறது. பூமி தனது எந்திரத்தை இயக்க இருமுறைகளில் எரிசக்தியை எடுத்துக் கொள்கிறது. கோள் உண்டாகக் கிடைத்த பூர்வ வெப்பசக்தி [Primordial Heat Energy], அடுத்து உட்கருவில் இயங்கும் யுரேனிய அணுப்பிளவில் கிடைக்கும் அணுக்கருச் சக்தி. விஞ்ஞானிகள் இதுவரைப் பல்வேறு கணினிப் போலி மாடல்களின் மூலம், பூமியில் எவ்வளவு அளவு யுரேனியம் /தோரியம் மிச்சமுள்ளது என்று கூற முடியவில்லை.
2016 செப்டம்பரில் புதியதோர் வெளியீட்டில் பூதளவாதிகளில் ஒரு குழுவினரும், நியூடிரினோ பௌதிகவாதிகளில் ஒரு குழுவினரும் 2025 ஆண்டுக்குள் பூமிக்குள் எவ்வளவு அணுவியல் எருக்கரு மிச்சமுள்ளது என்று கணித்துவிடுவோம் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்கள். அந்த வெளியீடு 2016 செப்டம்பர் “இயற்கை” [Nature Journal] விஞ்ஞான அறிவிப்பாக வந்துள்ளது. அதில் ஈடுபாட்ட விஞ்ஞானிகள் :
மாரிலாண்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
பிரேகில், சார்லஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
சைனா பூதளவியல் கல்விப் பேரவை, விஞ்ஞானிகள்.
பூமிக்குள் இருக்கும் மிச்ச எரிசக்தியைக் கணிப்பது எப்படி ?
2025 ஆண்டுக்குள் பூமியின் உட்கருவில் மிஞ்சியுள்ள எரிசக்தி அளவைக் கணிக்க விஞ்ஞானிகள், தாமறிந்த மிக நுண்ணிய துகள்களைக் [Tiniest Subatomic Particles like Geo-neutrinos] கருவிகள் மூலம் கண்டறிய வேண்டும். இந்த எதிர் நியூட்ரினோக்கள் [Antineutrino Particles] மனிதர் அமைத்த அணுமின் நிலையங்கள், சூப்பர்நோவா, கருந்துளைகள், சூரியன் போன்ற விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இயக்கங்களில் உண்டாகும் கிளை விளைவுகள். அந்த நியூட்ரினோக்கள் புவி மைய அணுக்கரு உலை இயக்கக் கதிரியக்கத் தேய்விலும் [Radioactive Decay] தோன்றுகின்றன.
அந்த எதிர் நியூட்ரினோக்கள் ஹைடிரஜன் அணுக்களுக்குள் விழும்போது, அந்நிகழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் கருவியானது இரு தனித்துவ ஒளிப் பொறிகளை [Light Flashes] உண்டாக்கி நிகழ்ச்சியை அறிவிக்கும். அத்தகைய ஒளிப்பொறி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை எத்தனை யுரேனியம் & தோரியம் அணுக்கள் பூமிக்குள் உள்ளன என்று நேரடி விகிதத்தில் காட்டும். யுரேனியத் தோரிய தேய்வு வெப்பசக்தி, மற்றும் பொட்டாசியம் உண்டாக்கும் வெப்பசக்தி ஆகியவையே பெரும்பான்மை எரிசக்தியாக பூமிக்குள் இயங்கி வருகிறது. எரிமலை வாயுக்கள் எழுச்சிகளில் காணும் ஹீலியம்-3 வாயுவே பூமிக்குள் இருக்கும் யுரேனிய/ தோரிய அணு உலை இருப்பை உறுதிப்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சி எண்ணிக்கையைக் கணக்கிடுவது மிக மிக மெதுவானது. உலகிலே உள்ள ஐந்து நியூட்ரினோ கணக்கிடும் கருவிகள் ஓராண்டுக்கு 16 நிகழ்ச்சிகளே பதிவு செய்கின்றன. அவை ஜப்பான் [KamLAND], இத்தாலி [Borexino], கனடா [SNO+ Detector], சைனா [JUNO] & அண்டார்க்டிகா [Neutrino Dtector] அமைப்புகளில் இராப் பகலாய் பதிவாகின்றன. 2022 ஆண்டில் இன்னும் மூன்று கருவிகள் இயங்கி ஆண்டுக்கு 536 நிகழ்ச்சிகள் பதிவாகும். புவி மைய அணுக்கரு எரிசக்தி மிச்ச இருப்பதைக் கணிப்பதால் பூமியின் முடிவை அறிய முடியும். எரிசக்தி வெளியீடு 4 மில்லியன் மெகாவாட் என்று முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பூமியின் ஆயுள் 4.5 பில்லியன் ஆண்டுகள் என்ற முந்தைய யூகிப்பு, எரிசக்தி முழுதும் தீர்ந்து, ஆயுள் 2 பில்லியன் ஆண்டுகள் என்றாகிப் போய்விடலாம் !
“பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”
“பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”
மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)
“ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”
பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)
பூகோள மையத்தில் இயங்கும் பூத வேகப் பெருக்கி அணு உலை
உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல ! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். ஐந்து மைல் விட்டமுள்ள கோள வடிவில் யுரேனியம் [+தோரியம்] நிறைந்த பூத வேகப் பெருக்கி அணுசக்தி உலை அது. அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !
பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது ! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !
ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !
கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.
பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !
பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை
ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.
உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.
தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.
யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்கு கின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.
வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !
விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி மைய அணுக்கரு உலை
பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார். அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.
பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !
(தொடரும்)
+++++++++++++++++
Images : BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது. இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல் சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது. இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன. இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் சேவகி” பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பராவை வெளியிடுகிறது. அதே சமயத்தில் திண்ணை.காம் ஷேக்ஸ்பியரின் “ஓத்தல்லோ” நாடகத்தைத் தமிழ்த் தழுவலாய் வாரம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
2023 பிப்ரவரி 26 அன்று சி. ஜெயபாரதன், 89 முடிந்து 90 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு, அன்றைய தினம் சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு அவர் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன், ஜெயபாரதனுக்கு வாழ்த்துகள் இசைத்துக் கொண்டாடினர்.
அறிஞர் ஜெயபாரதன் நீடூழி வாழ, வல்லமை.காம், திண்ணை.காம் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
இமயத் தொட்டிலை ஆட்டி எப்படி எழும் பூகம்பம் ? பசிபிக் தீவுகளில் குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் உட்கருவிலே தீக்குழம்பை ஈர்ப்புக்கு எதிராய் பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும் அசுர அணு உலை ஒன்று எப்படி உருவானது ? ஆழ்கடல் அடியில் பன்னூறு அணுகுண்டு வெடித்து அசுரச் சுனாமிப் படை அலைகள் எப்படிக் கரையேறி அழிக்கும் ?
தாயின் கர்ப்ப பையில் அற்புதச் சிசு எப்படி உருவாகுது, பத்து மாதம் வளர்ந்து ? மாங்கனி, பலா, வாழை, ஆப்பிள் தேங்காய், கரும்பு, திராட்சை, மாதுளை, பீச்சு, பேர் கனிகளில் எப்படி தனித்தனி சுவைதரும்
இனிப்புச் சார் சுரக்குது ? பற்பல வண்ணளில் வானில் பறக்கும் புல்லினம் எப்படித் தோன்றின ?
நியூட்டன் புற இயக்கி இன்றி, இவ்வகை எல்லா அக இயக்கிகள்
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
ஆல்ஸ் மலைத் தொட்டிலை ஆட்டி உலுக்கி அடித்தளத் தட்டுகள் ஏறி, இறங்கி துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் எப்படி எழும் ஓர் அசுர பூகம்பம் ? பசிபிக் தீவுகளில் குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் உட்கருவிலே தீக்குழம்பை ஈர்ப்புக்கு எதிராய் பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும் அசுர அணு உலை ஒன்று எப்படி உருவானது ? ஆழ்கடல் அடியில் பன்னூறு அணுகுண்டு வெடித்து அசுரச் சுனாமிப் படை அலைகள் எப்படிக் கரையேறி அழிக்கும் ?
தாயின் கர்ப்ப பையில் அற்புதச் சிசு எப்படி உருவாகுது, பத்து மாதம் வளர்ந்து ? மாங்கனி, பலா, வாழை, ஆப்பிள் தேங்காய், கரும்பு, திராட்சை, மாதுளை, பீச்சு, பேர் கனிகளில் எப்படி தனித்தனி சுவைதரும்
இனிப்புச் சார் சுரக்குது ? பற்பல வண்ணளில் வானில் பறக்கும் புல்லினம் எப்படித் தோன்றின ?
நியூட்டன் புற இயக்கி இன்றி, இவ்வகை எல்லா அக இயக்கிகள்
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய முதல் பூமியின் படம்
காமிரா அனுப்பிய நிலவின் முதல் படத்தில் நெடுங் குழிகள் தெரிந்தன. பாதாளக் குழிகளில் பனிப்பாறைகள் காணப் பட்டன. நிலவில் நீர் உறைந்த நெடும் பாறைகள் இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.
ஓரியன் விண்சிமிழ் காமிரா நிலவை நெருங்கி 80 மைல் உயரத்தில் பாதாளக் குழிகளை உற்று நோக்கிப் படம் எடுத்தது. ஆழத்தில் தெரிந்த நீர்ப்பனி உறைவுப் படங்கள் பதிவு செய்யப்பட்டன.
ஓரியன் விண்சிமிழ் நிலவை நோக்கி
அடுத்துத் திட்டமிட்ட ஓரியன் விண்சிமிழ் ஆறு பேர் அமரும் வசதி உடையது. சில நாட்களில் ஓரியன் விண்சிமிழ் நிலவை விட்டு தள்ளி தூரப் பின்சுற்றுப் பாதையில் [Distant Retrograde Orbit ] 50,000 மைல் தொலைவில் செல்லும். அப்பாதையில் ஓரியன் ஆறு நாட்கள் சுற்றும். எதிர்காலத்தில் இப்பாதையில் ஒரு நிலா சுற்று நிலையம் அமைக்கத் திட்டம் உள்ளது. நிலவுக்கு வரும் விண்வெளிப் பயண விமானி களுக்குத் தங்க இந்த நிலையம் ஓர் ஓய்வு சிமிழாகப் பயன்படும். ஆறு நாட்கள் சுற்றிய பின், விண்சிமிழ் 2022 டிசம்பர் 11 இறுதியில் புவியீர்ப்பு கடந்து பூமிக்கு மீளும். பசிபிக் கடலில் மூன்று பாராசூட் குடைகள் தாங்க மனிதரற்ற விண்சிமிழ் வந்து இறங்கும். 2025 ஆண்டுக்குள் மீண்டும் ஓரியன் விண்சிமிழ்
மூலம் புவி மனிதர் பயணம் செய்து தமது தடம் வைப்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா கென்னடி ஏவு தளத்தில் நாசா & ஈசா விஞ்ஞானிகள் 100 மீடர் [ 322 அடி ] உயரமுள்ள ஆர்டிமிஸ் -1 ராக்கெட், ஓரியன் விண்சிமிழை ஏந்திக் கொண்டு, மீண்டும் நிலவை நோக்கிச் சென்று ஆராய ஏவப்பட்டுள்ளது. அந்த விண்வெளி விண்சிமிழ் ஒரியன், நிலவை நெருங்கி 4600 மைல் தூரத்தில் ஆராய்ச்சிகள் அடுத்து நடத்த தகுதியான ஓரிடத்தைத் தேடுவது, விண்வெளி நிலா நிலையம் ஒன்றை நிறுவி நிரந்தரமாய்ச் சுற்றி வருவது, அந்த நிலையம் விண்வெளிப் பயணிகளுக்கு, விமானிகளுக்கு விடுதியாய் அமைப்பது போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு வசதியாய் இருக்கும்.
முதல் ஆர்டிமிஸ் ஓரியன் விண்சிமிழ் விமானிகள் இல்லாமல், நிலவை நெருங்கி இரண்டு வாரங்கள் ஆய்வுகள் செய்து, தானாய் பூமிக்கு மீளும்.
ஆர்ட்மிஸ் 85 mph வேகத்தில் புயல் அடிப்பினும் எதிர்த்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. ஓரியன் விண்சிமிழ் 450,000 கி.மீடர் [280,000 மைல்] தூரமுள்ள நிலவை நெருங்க 14 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நவம்பர் 16 இல் ஏவப்பட்ட ஓரியன் மின்சிமிழ், ஆய்வுகள் நடத்தி டிசம்பர் 11 தேதி பசிபிக் கடலில் பாராசூட் குடையில் வந்திறங்கும். 50 ஆண்டுகட்கு முன், மனிதர் இயக்கும் அப்பொல்லோ -11 விண்சிமிழ் நிலவைச் சுற்றி அதில் இறங்கியது.
ஓரியன் பூமிக்கு மீளும் போது 25,000 mph வேகத்தில் 5000 டிகிரி F உஷ்ணச் சூழ்வெளி கடந்து கடலில் வீழும். 2023 இல் ஆர்டிமிஸ் – II விமானிகள் இயக்கும் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். மனிதர் நால்வர் செல்லும் ஆர்டிமிஸ் -III நிலவில் கால்வைக்கும் திட்டம் 2024 இல் நிறைவேறும்.
நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க, ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1
Posted on
NASA’s Space Launch System rocket with the Orion spacecraft aboard is seen atop a mobile launcher at Launch Pad 39B as preparations for launch continue, Friday, August 26, 2022, at NASA’s Kennedy Space Center in Florida.Artemis-1 is a mission like no other—a long-duration trip to the Moon, way past it and back again. The first in an increasingly complex series of missions, Artemis I will test NASA’s new heavy-lift rocket, the Space Launch System (SLS) and Orion spacecraft as an integrated system prior to crewed flights to the Moon.
2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி நாசா நிலவுக்கு ஏவும் அசுர ராக்கெட்ஆர்டிமிஸ் -1
50 ஆண்டுகட்குப் பிறகு நாசா புது வலுமிக்க ராக்கெட் ஆர்டிமிஸ்-1 தயார் செய்து, மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்யப் போகிறது. 1969-1972 ஆண்டு பொறிநுணுக்கமான அப்பொல்லோ -11 ராக்கெட் [Saturn V in 1973. பயன் Orion Capsule] படுத்தப்பட்டு முதன் முதலில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் கருநிலவில் 1969 ஜூலையில் தனது பூதத் தடம் வைத்து வரலாற்று முதன்மை பெற்றார். இரண்டாம் தடவை நிலவுக்குச் செல்லும் நாசா இம்முறை நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கப் போகிறது. அந்த வரலாற்று முக்கிய பயணம் பிலாரிடா கென்னடி ஏவுகணை மையத்தில், 2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி, காலை 10:30 மணிக்கு, காலநிலைச் சூழ்வெளித் தடைகள் ஏதுமின்றி அனுமதி தந்தால், பச்சைக் கொடி பயணத்துக்கு காட்டப்படும்.
மனிதர் இயக்காத இந்தப் புதிய திட்டம் ஆர்டிமிஸ் -1 விண்வெளியில் 42 நாட்கள் நீடிக்கும். 322 அடி உயரத்தில் நிற்கும் அசுர ராக்கெட் [ 8.8 million pounds (3.9 million kg) of thrust, SLS is the most powerful rocket ever produced.] முனையில் உள்ள ஓரியன் விண்சிமிழ் [Orion Capsule] நிலவைச் சுற்றி வரும். அந்த ராக்கெட்டை டிசைன் செய்து அமைக்க 20 பில்லியன் டாலர், அதை நிலவுக்கு விண்சிமிழைத் தூக்கிச் செல்ல மேலும் 4.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கு தேவைப்பட்டது. இனி அடுத்து மூவர்/நால்வர் இயக்கும் ஆர்டிமிஸ் -3 விண்சிமிழ் 2024 ஆண்டு தாமதத் தயாரிப்புக்கு 2 பில்லியன் மேலும் செலவு.
இருமுறை ஏவிடப் பயணம் தயாராக இருந்தும், சில இடையூறுகளால் ஆர்டிமிஸ் -1 திட்டம் நிறைவேறாமல் தடைப்பட்டது.
நாசாவின் பூகோளப் பாதுகாப்பு உறுதி, அசுர விண்வெளி சாதனை
2022 செப்டம்பர் 26 இல் நாசா பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும் ஒரு விண் பாறையைக் குறிவைத்து தாக்கி அதன் சுற்றுப் பாதையை மாற்றி உள்ளது. அச்சிறு விண்பாறை மற்றுமோர் பெரும் விண்பாறையைச் சுற்றி வருகிறது. இந்த இரட்டை விண்பாறை அமைப்பை சூரியமண்டலத்தில் பின்பற்றித் தாக்குவது சற்று எளிதாகத் தோன்றினாலும், மெய்யாக இது ஓர் இமாலய முயற்சியே. சிறிய பாறை பெரிய பாறையை ஒரு முறை சுற்ற 11:55 மணி நேரம் எடுத்தது. விண்கணை மோதலுக்குப் பிறகு 32 நிமிடம் குறைந்து, 11:23 நேரம் பிடித்தது.
இந்த வெற்றிகரமான விண்வெளிச் சாதனை பூமிமேல் விண்பாறை விழுந்து பிரளயப் பேரிடர் நிகழும் எதிர்கால பயத்தை நீக்கியுள்ளது.
1969 ஜூலையில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் நிலவில் கால்வைத்த வரலாற்று நிகழ்ச்சிக்கு நிகரானது, விண்பாறைமேல் மோதி விலக்கிய அபாய எதிர்பார்ப்பு பிரளயப் பேரிடர்.
நாசாவின் இரண்டாவது வரலாற்று விண்வெளி வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறையின் சுற்றுப் பாதை மாற்றமானது உறுதியாகி அமெரிக்கப் பாதுகாப்பும் உலகப் பாதுகாப்பும் நாசாவின் பொறுப்பாகி விட்டது.
Update on DART Mission to Asteroid Dimorphos (NASA News Conference Oct. 11, 2022)
Streamed live on Oct 11, 2022 Experts discuss early results of the NASA’s Double Asteroid Redirection Test (DART) mission and its intentional collision with its target asteroid, Dimorphos.
On Monday, Sept. 26, DART successfully impacted its asteroid target in the world’s first planetary defense technology demonstration. As a part of NASA’s overall planetary defense strategy, DART’s impact with the asteroid Dimorphos will help to determine whether asteroid deflection using a kinetic impactor spacecraft is a viable mitigation technique for protecting the planet from an Earth-bound asteroid or comet, if one were discovered. Johns Hopkins APL manages the DART mission for NASA’s Planetary Defense Coordination Office as a project of the agency’s Planetary Missions Program Office. Neither DART’s target asteroid, Dimorphos, nor its larger asteroid parent, Didymos, poses a hazard to Earth.
Participants include: • NASA Administrator Bill Nelson • Italian Space Agency President Giorgio Saccoccia DART update panel: • Lori Glaze, director of the Planetary Science Division at NASA Headquarters in Washington • Tom Statler, DART program scientist at NASA Headquarters • Nancy Chabot, DART coordination lead at the Johns Hopkins Applied Physics Laboratory (APL) in Laurel, Maryland More on DART:
DART was the first-ever mission dedicated to investigating and demonstrating one method of asteroid deflection by changing an asteroid’s motion in space through kinetic impact.
விண்பாறை மீது நேரடியாக மோதி வேறு பாதைக்கு நகர்த்தும் நாசாவின் முதல் முயற்சியில் வெற்றி.
2022 செப்டம்பர் 26 ஆம் தேதி ஏவிய டார்ட் [DART – DOUBLE ASTROID RE-DIRECTING TEST SPACECRAFT] விண்கணை முதன்முதல் பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் [11 மில்லியன் கி.மீ] தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும், திமார்போஸ் / திடிமாஸ் [Dimorphos / Didymos] என்னும் இரட்டை விண்பாறைகளில் ஒன்றை மோதி, அவற்றின் பாதையை மாற்றி யுள்ளது. இவற்றில் திடிமாஸ் பெரியது. அதைச் சுற்றிவரும் திமார்போஸ் சிறியது. டார்ட் விண்கணை மோதிய விண்பாறை சிறியது. விண்கணை மோதியால் பாதை எவ்விதம் மாறியுள்ளது, என்று விஞ்ஞானிகள் விண்ணோக்கிகள் மூலம் கணித்து வருகிறார் நாசாவின் இந்த முதல் விண்வெளி முயற்சி எதிர் காலத்தில் பூமியை எதிர்நோக்கி மோத வரும் விண்பாறைகளைத் திசை திருப்பும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடையும்.
டார்ட் விண்கணை 2021 நவம்பர் 24 இல் ஸ்பேஸ் X ஃபால்கன் -9 [SPACEX FALCON -9] ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்பாறையில் மோதிய வேகம் சுமார் மணிக்கு 14,000 மைல். இந்த விண்வெளிச் சாதனை “பூகோளப் பாதுகாப்பு” [Planetary Defense] என்னும் அகில நாட்டுகூட்டுழைப்பில் நிதி செலவழிக்கப் படுகிறது. இந்த இரட்டை விண்பாறை போக்கு முறைகளைக் கண்காணித்து வருபவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பௌதிக வினை ஆய்வுக் [Johns Hopkins Applied physics Laboratory Team] குழுவினர். இந்த விண்வெளித் திட்டத்துக்கு நிதிச் செலவு 308 மில்லியன் டாலர். விண்பாறையின் அகலம் : 525 அடி, டார்ட் விண்கணையின் எடை 570 கி.கிராம்.. அடுத்து 2024 ஆண்டில் ஏவப்படும் விண்சிமிழ் 2026 இல் விண்பாறையுடன் இணைந்து ஆய்வுகள் புரியும். விண்கணை மோதி விண்பாறைகள் பாதைகள் மாற்றம் இப்போது கணிக்கப்படும்.