துணைவியின் இறுதிப் பயணம் – 6

 

சி. ஜெயபாரதன், கனடா

அமர கீதங்கள்

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 [Miss me, But let me go]

++++++++++++++

 என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

 தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018  [9/11]

++++++++++++++++++

துணைவியின் இறுதிப் பயணம் – 6

சி. ஜெயபாரதன், கனடா

அமர கீதங்கள்

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

[6]

நேற்று

நேற்று

ஒளி வீசி

நடமாடிய தீபம்,

புயல்

காற்றில்

அணைந்து போய்,

வீட்டுச் சுவரில்

படமாகித் தொங்கும்

இன்று,

மாலை போட்டு !

 +++++++++++++

 [7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும் 
உண்மைத் திரைக் காட்சி 
ன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி 
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது 
உனக்குத் தெரியாது ! 
அதன் 
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து 
போய் விட்ட பிறகு
அதன் இழப்பு தான்,
உனது 
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது  !

 +++++++++++++

[8] 

புனிதவதி

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,

ஒருமுறை நான் பார்த்து

ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள் 
ஐம்பத் தாறு ஆண்டுகள்

ஆதவன் உதித்தான் !
ஆனால் ன்று
நின்றதவள் 
கைக் கடிகாரம்.

+++++++++++++++

[9]

ஒருவரி

 

ஒருவரி எழுதினால் 
எழுதென
ஒன்பது வரிகள் 
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து 
முதலில் 
என்னை எழுது
என்னை எழுது என்று 
கெஞ்சும் !
என் டைரியில் 
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் ! 
எழுதி, எழுதி, எழுதி 
என் மனம் தினம் 
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

 

 

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் ! 
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி 
ட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த 
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் கிழிந்து குருதி
கொட்டும் !
குருதி கொட்டும் !
கொட்டி 
ஆறாய் ஓடும் !
மருத்துவர் 
இரத்தம் கொடுத்தார் 
பை, பையாக 
கை கடுக்க, கால் கடுக்க 
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி

கண்டேன் !

வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அறுவை முறை 
வெற்றியே !
ஆனால் 
அவள் கைக் கடிகார 
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

 

[11]

 

எழுதப் பட்டிருக்கிறது !

 

 

எப்படித் துவங்கும் அவள் 
இறுதிப் பயணம் ?
எப்போது 
எச்சரிக்கை மணி 
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும் 
என்றெனக்குத் 
தெரியாது !
ஆனால் 
அது முன்பே 
எழுதப் பட்டுள்ளது !
காலன் விடும் 
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி 
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

 

++++++++++++++++

 

[12]

கண்ணீர்த் துளிகள்

 

எனது கண்ணீர் 
மது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும் 
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது ! 
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும் 
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து 
காலவெளி
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++  +++++++++++++++++++++++

[13]

 

 

உயிர்த்தெழுவாள் !

விழித்தெழுக என் தேசம்

என்னும் 

கவிதை நூல் 

எழுதி வெளியிட்டேன்.

ஆனால் 

என் துணைவி,

அறுவை சிகிட்சையில் 

விழிதெழ வில்லையே என

வேதனைப் பட்டேன்.

இந்துவாய் வாழ்ந்து

பைபிள் பயின்று

கிறித்துவை நம்பும்

உன் துணைவி

உயிர்த் தெழுவாள் என்று

ஓர் அசரீரிக் குரல்

ஒலித்தது உடனே

வெளி வானில் ! 

 

+++++++++++++

[14]

 

நேற்று

ஒளிகாட்டி

நடமாடிய தீபம்

புயல்

காற்றில் அணைந்து,                                                                                         

ஓவியமாகி

வீட்டுச் சுவரில் நினைவுப்

படமாகித்

தொங்குகிறது

இன்று

மாலையோடு !

 

++++++++++++

 

[15]

 

பெருங் காயம் !

 

உயிர்மெய்க் காயம்

பொய்யாம் !

மண்ணிலே தோன்றிய

பெண்மணிக்கு

எத்தனை,

எத்தனை அணிகள் !

ஜரிகைப் பட்டு

ஆடைகள் !

ஒப்பனைச் சாதனம் !

அனைத்தையும்

விட்டுப்

போனது துணைப் புறா,

இப்போது

துருப்பிடிக் காத

ஒரு கும்பா வுக்குள்

எரி சாம்பலாய்,

அவள் நீடித்த

குடியிருப்பு !

 

+++++++++++++++                                  

 

[16]

 

தொட்ட இடம் !

 

 

இவ்வுலகில்

முப்பத்தாறு ஆண்டுகள்

மூச்சிழுத்த

இல்லத்தைப் பூட்டி விட்டுப்

போனவள்,

மீண்டும் திறக்க இங்கு

வரவில்லை !

வீட்டில்

தொட்ட இடம், துடைத்த இடம்

தூய்மை இழந்தன !

சுட்ட சட்டி, அறைத்த

அம்மி

விம்மி, விம்மி

அழுதன !

துவைத்த உடை காயாமல்

ஈரமாய் உள்ளது !

பண்ணிய வடை

இனித் தின்பாரற்று

ஊசிப் போகுது !

மண்ணாகி

மீளாத் துயிலில்

அவள்

தூங்கும் இடம் இப்போது

விண்ணாகிப்

போனது !

 

++++++++++++++++

[17]

 

ஆபரணங்கள்

 

பெண்ணுக்குப்

பொன்னாசை உள்ளது !

உயிர் உள்ளவரை மேனியில்

அணிகள் ஒளிவீசும் !

உயிர் போன பிறகு

எதுகை, மோனை

எதற்கு ?

உபமானம், உபமேயம்

எதற்கு ?

உடை யில்லாத

உயிர்மெய்

சொல்லுக்கே

வல்லமை அதிகம் !

உயிர்மெய்

உலகை விட்டுப் போன

பிறகு

உன் சோக வரலாறு

சொல்ல

இலக்கணம் எதற்கு ?

தலைக் கனம்

போதும்.

 

+++++++++++++++++++

[18]

 

இறுதிப் பயணம்

 

முப்பதாவது நாளின்று !

போன மாதம்

இதே நேரம், இதே நாளில்,

ஓடும் காரில்

பேரதிர்ச்சியில்

இரத்தக் குமிழ் உடைந்து

உரத்த குரல்

எழுந்தது என்னருகே !

ஃபோனில்

911 எண்ணை அடித்தேன் !

அபாய மருத்துவ

வாகனம் அலறி வந்தது

உடனே !

காலன் துணைவியைத் தூக்க

நேரம் குறித்தான் !

ஏக்கத்தில் தவிக்கும் நான் !

நவம்பர் 9 ஆம் நாள்,

இதுவுமோர் 9/11 ஆபத்து தான் 

மாலை மணி 6 !

நடுத்தெரு நாடக மாகி,

சிறுகதை யாகி

பெருங்கதை யாகி,

இறைவன்

திருவிளை யாடல்    

துவங்கும் !

 

++++++++++++++

[19]

 

[டிசம்பர் 9 ஆம் நாள்]

 

அந்த வெள்ளிக் கிழமை

 

அற்றைத் திங்கள்

அந்த வெள்ளிக் கிழமை

எந்தன் துணைவியும் இருந்தாள் !

அவளோடு ஒட்டி

நானும் இருந்தேன்.

வீட்டு விளக்கு

வெளிச்சம் தந்தது !

இற்றைத் திங்கள்

இந்த வெள்ளிக் கிழமை 

என் துணைவியும் இல்லை !

தனியனாய் நான்

பிரிவு நாள் அது.

பெரிய துக்க நாள் அது !

 

+++++++++++++++++++

[20]

 

என் இழப்பை நினை !

ஆனால் போகவிடு எனை !

 

ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

பயண முடிவுக்கு நான் வந்த பிறகு

பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,

கருமாதி எதற்கு துக்க அறையில்,

கதறல் எதற்கு விடுபடுது ஆத்மா ?

 

என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்

இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,

நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,

இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

 

இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,

இப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,

ஊழித் தலைபதி இடும் திட்டம் இவையெலாம்.

ஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.

 

தனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது

உனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,

உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை.

 

+++++++++++++++++++++++++

 

 

 

துணைவியின் இறுதிப் பயணம் – 5

சி. ஜெயபாரதன், கனடா

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

தோற்றம் : அக்டோபர் 24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

 

++++++++++++++++++

[21]

 

எழுதிச் சென்ற ஊழியின் கை !

 

 

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழியிடம்

ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள் 

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

 

++++++++++++++++

 

[22]

 

ஊழியின் எழுத்தாணி

 

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும்

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

 

+++++++++++++

 

[23] 

 

அன்னமிட்ட கைகள்.

 

 

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது அன்புடன்

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோரே.

 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

துணைவியின் இறுதிப் பயணம் – 6

சி. ஜெயபாரதன், கனடா

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

 [24]

[ஆயுள் சான்றிதழ்]

[Life Certificate]

 

ஓய்வு ஊதியம் பெறுவதற்கு

ஓவ்வோர் ஆண்டும்

ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்

அவசியம்.

இந்திய அரசாங்க ஆணையர்

நவம்பர் மாதம்

முதல் வாரம் அளிப்பார்

முத்திரை குத்தி !

தம்பதிகள் இருவரும் புறப்பட்டோம்.

பயணம் துவங்கியது.

பாதி வழியில்

இருளும் மாலை நேரத்தில்,

திடீரெனத் துணைவி

இரத்தக் குழல் குமிழியில்

நேர்ந்தது வெடிப்பு !

உள் பூகம்பம் !

நாள் காட்டியில்

காலன் என்றோ குறித்து வைத்த

நவம்பர் ஒன்பதாம் நாள் !

அடுத்தோர் 9/11

அபாய மரண நிகழ்ச்சி

நேரும்

ஓருயிருக்கு !   

முடிவில் நடந்தது என்ன ?

எனக்குக் கிடைத்தது

அரசாங்கத்தின்

ஆயுள் சான்றிதழ்.

என்னருமைத் துணைவிக்கு

எமனின் 

மரணச் சான்றிதழ் !

 

++++++++++++

 துணைவியின் இறுதிப் பயணம் – 7

சி. ஜெயபாரதன், கனடா

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

[25]

தங்க ரதம்

 

தங்க ரதம் போல்

வீட்டில் தினம்

உலாவி வருவாள் !

மங்கா ஒளி முகத்தோடு

வீட்டில் தினம்

விளக்கை ஏற்றுவாள்.

தகதகக்கும் அந்த

தங்க மேனியாளை

திருமணத்தில் கைப் பற்றிய நான்,

இறுதியாக

என்னிரு கைகளால்

எரியும் மின்சார நெருப்பிலே

தள்ளினேனே ! நான்

தள்ளினேனே !

 

+++++++++

[26]

மரணம்

 

மானுட இனத்துக்கு

மரணம் என்பது

புதிதல்ல !

மரணம் என்பது

விதியல்ல என்று நீ

சொல்லாதே !

மதியால் விதியை நீ

வெல்லலாம் !

ஆனால்

மரணத்தை வெல்ல

முடியுமா !

பிறப்பும், இறப்பும்

உயிரின வாழ்க்கையின்

இருதுருவங்கள்.

பிறந்தவர்

ஒருநாள் இறப்பவர் தான்

இறப்பவர் மீண்டும்

பிறப்பர்

என்பது தெரியாது !

மரணம் புதிதல்ல என்று

உரைத் தெனக்கு

ஆறுதல் கூற வராதீர் !

மரணம் விதியல்ல என்று

இறையிடம்

முறையிடுவேன் !

மரணம்

அரக்கர் தொழில் !

மானிடப் படைப்பைச் சீராய்

உருவாக்கிய பிறகு 

ஊனுருகப் பறிப்பது தான்

உன் அறுவடையா ?

அல்லது

அறநெறியா ?

 

+++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

 

துணைவியின் இறுதிப் பயணம் – 8

சி. ஜெயபாரதன், கனடா

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

[27]

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை

சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – காலவெடி

மாய்த்த துணைவிக்கு கானடா வில் தீவைப்பு !

ஆயுள் முடிந்த கதை.

 

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை

சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – பாழ் உலகில்

காலவெடி மாய்த்த துணைவிக்குத் தீ கனடா !

ஊழியின் முத்திரைக் குத்து.

 

++++++++++++++++++++++++

[28]

தனிமை

 

கொடிது கொடிது இளமையில்

வறுமை !

அதனினும் கொடிது

நடுமையில்

ஊழிய வருவாய் இன்மை !

அதனினும் கொடிது

முதுமையில் நோய்மை !

அதனினும் கொடுமை

மண விலக்கு,

இல்லற உடைப்பு,

புறக்கணிப்பு !

அனைத்திலும் கொடுமை

மனத்துக் கினிய

மனைவியோ, கணவனோ

சட்டெனத் தவறி

மனிதப் பிறவி நொந்திடும்

தனிமை ! தவிக்கும் 

தனிமை.

 

++++++++++++++++

[29]

இட்ட கட்டளை

 

முதலில் கண் மூடுவது

தானோ அல்லது

நானோ என்று

நாள்தோறும்

எட்டிப் பார்ப்பாள் என்னை

அடிக்கடி,

அடுத்த அறையில் நான்

எழுதும் போது !

இரவு பதினொரு மணி

இனிமேல்

எழுத வேண்டாம் என

எனக்கிடுவாள் கட்டளை !

உங்களுக்கு

எதுவும் நேர்ந்தால்

எனக்குத் தெரியாது.

என்னால் உதவ முடியாது

தூங்கச் செல்வீர்.

 

+++++++++++

[30]

துணைவியின் கொடை

 

கண்ணும் கருத்துமாய்

வளர்த்த

பெண்டிர் இருவர்.

மூத்தவள்

மருத்துவப் பணி.

இளையவள்

பொறியல் பணி.

தக்கார் தகவிலர் என்பது

மக்கட் திறனால்

தெரியும்.

இல்லறப் பயன்பாடு

என்பது

பிள்ளைகள் செயற்பாடு.

 

++++++++++++++

[31]

பொங்கலோ பொங்கல்

 

ஒவ்வோர் ஆண்டும்

தவறாது

ஒவ்வோர் தை மாதமும்

மறவாது,

குளிர்நாடு கானடாவில்

எங்கள் இல்லத்தில்

கமகமவென மணக்கும் பால்

பொங்கல் வைப்பாள்

என்னருமைத் துணைவி.

தித்திக்கும்

சர்க்கரைப் பொங்கல் !

சாம்பார்

வெண் பொங்கல் !

இரட்டைப் பொங்கல் !

இவ்வாண்டு தைத் திங்கள்,

பொழுது புலர்ந்தது,

பொங்கல் பானை,

புத்தரிசி,

சர்க்கரை, கரும்பு, பால்

அக்கரையுடன்

காத்திருக் கின்றன,

வீட்டு வாசல் முற்றத்தில் !

சர்க்கரைப்

பொங்கல் வைக்க இல்லையே

துணைவி

எங்கள் இல்லத்தில் !     

 

+++++++++++++++++++++

 

[32]

மானுடப் பிணைப்பு

[Human Bondage]

 

“மானுடம் பூத்தது

வாழ்வதற்கு ! அந்த

மன்மத ராகங்கள்

காதலுக்கு !” என்று

கனடா கவிஞர் புகாரி

கவிதை

எழுதி வைத்தார்.

முன்புறம்

ஒரு கதவு மூடினால்

பின்புறம்

மறு கதவு திறக்கிறது !

இறுதியில்

பிரிந்து செல்லும் கை

பிடித்தது

என் இடது கையை

பிரியா விடை பெற்று !

உடனே அடுத்து நான் வாழப்

பிணைக்கும்

இருகரங்கள் பற்றி

இழுத்துக் கொள்ளும் என்னைத்

தன்வசம் !

இன்னும் ஆயுள் நீடிக்கும்

உனக்கு !

வாழ நினைப்பாய்.

இல்லார்க்கு உதவ முனைவாய்,

இன்னும் முடிக்க வேண்டிய 

பணிகள் பல உள்ளன,

உன்னைப் படைத்த படைப்பாளி

உனக்கிட்ட வினைகளை

முடிப்பாய் !

பயணம் முடிய வில்லை

உனக்கு !

 

+++++++++++++++++++++

[33]

சிலுவை

 

ஒவ்வோர் மனிதனும்

தன் முதுகிலே

தனது சிலுவைச் 

சுமந்து கொண்டு தான்

சுற்றி வருகிறான் உலகை

செக்கு மாடுபோல்,

தெரிந்தோ

தெரியாமலோ !

மதுபானம் சிலருக்கு!

மரிவானா சிலருக்கு !

மடிவெடி சிலருக்கு !

புற்று நோய் சிலருக்கு !

பட்டென வெடித்துக் கொல்லும்

இரத்தக் குழல் வீக்கம்

சிலருக்கு !

பயண முடிவிலே சிலுவையில்

யார் உன்னை அடிப்பது

ஆணியில் ?

ஊழிக் காலன் தான் !

 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

 

 

 

 

 

 

 

 

 

துணைவியின் இறுதிப் பயணம் – 10

சி. ஜெயபாரதன், கனடா

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

[34]

மனமுடைந்த நான்கு மாதர்

 

அன்னிய மாதர் அனைவரும்,

ஒட்டுமில்லை எனக்கு

உறவுமில்லை !

மருத்துவ மனையில்

மனமுடைந்து

நான் அழும் போது

ஒடிவந்து அணைத்துக் கொண்டு

ஆறுதல் அளித்த அந்த

மருத்துவ மாது !

“மனைவி பிழைக்க மாட்டாள்

போவென,” என்னை

டாக்சியில் அனுப்பிய கனிவு

டாக்டர் மாது !

 

மனைவி மரித்து விட்டாள்

எனத் தகவல் கேட்ட

உடனே

இரங்கல் மடலோடு

ஏந்திய

மலர்க் கொத்தோடு

இருகண்களில்

தாரை தாரையாய்க்

கண்ணீர் சிந்த

ஓடிவந்து அணைத்துக் கொண்டு

ஆறுதல் அளித்த

ஜெவோஹா விட்னஸ்

மாது !

அடுத்த நாள் ஆவி பறக்க

சுடச்சுட சூடாக

சூப்பு தயாரித்து எனது

கரங்களில் கொடுத்த அதே

கிறித்துவ மாது !

 

மாதமிரு முறை

வீட்டைத் துடைக்க வரும்

பணி மாது !

வேலை செய்யப் போன

வீட்டில்

மனைவி மரித்து விட்டாள் எனக்

கேட்ட போதே

தேம்பித் தேம்பி அழுத மாது !

அடுத்த நாள்

பூக்கும்பா கொண்டு வந்த

வீட்டுப் பணி மாது !

 

துணைவி மரித்து விட்டாள் எனக்

பக்கத்து வீட்டுக்

காவல்துறை நண்பரிடம் நான்

சொல்லிச் சென்ற பின்,

நோயுடன் படுத்துக் கிடந்த

அவரது மனைவி,

கதவைப் பட்டெனத் திறந்து

போர்வை எதுவு மின்றித்

துள்ளி ஓடி வந்து

என்னை நிறுத்தி

தெருவிலே அழத மாது !

 

மனைவி மரித்த தற்குக்

கண்ணீர் விட்ட

அன்னிய வனிதையர்.

மனப் பாறையில் செதுக்கி நான்

மறக்க முடியாத அந்த

மாதரெல்லாம்

பூதலத்தில் பிறந்த

தேவ மகளிர் !

 

+++++++++++++++++

[35]

இறுதி நிகழ்வுகள்

[9/11]

[நவம்பர் 9, 2018]

 

வெள்ளிக் கிழமை !

இறுதிப் பயண நாள் அது

தலைவலி

உள்ளதெனக் கூறி மாலை

ஐந்து மணிக்கு,

ஆரஞ்சுவில் ஓட்டலில்

காபி தயாரித்து

என்னுடன் காபி அருந்தி  

உரையாடியது,

அதன் பிறகு

இளைய புதல்வியுடன் இனிதாய்ப்

பேசியது !

ஹார்வி, சுவிஸ் சாலே

ஓட்டலுக்குப் போவீர் என்று

எங்கள் திசையை மாற்றியது

இளைய மகள் !

இரவு உணவு உண்ணப்

போவது

ஆறு மணிக்குத் தான் என்று

மீண்டும் மீண்டும்

அழுத்திக் கூறியது

மனைவி !

ஆறு மணி தாண்டி

நாங்கள்

கார் போகும் போதுதான்

நேர்ந்தது 9/11 விபத்து !

இரத்தக் குழல் குமிழ் விரிந்து

உள்வெடிப்பு !

உரத்த குரலில் வலியில்

கத்தினாள் !

என் நெஞ்சைப் பிளந்தது

அக்குரல் !

911 எண்களைத் தட்டினேன் !

மணியடித்து

அவசரக் காப்பு வாகனம்

வந்தது உடனே !

மருத்துவரிடம்

வலியோடு தன் பெயரை

வயதைச்

சொல்லி இருக்கிறாள் !

ஒருமுறை

மருத்துவ மனையில்

தாங்கா வலியுடன் தவித்துக்

கண்திறந்து பார்த்து

என் இடது கையைப் பற்றியது

இறுதியில் !

கண்மூடி, வாய்மூடிய சமயம்,

புதல்வியர் பேசிய போது  

கால், கைவிரல் மட்டும் அசைந்தன,

இடது கண்ணில்

வடிந்தது ஒரு சொட்டுக்

கண்ணீர் !

இறுதிக் கண்ணீர் !

 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

 

மூன்றாம் உலகப் போர் 

 

image.png
 
மூன்றாம் உலகப் போர் 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
 
ஈழத்தில் இட்ட மடி வெடிகள்,
மத வெறி வெடிகள் !
திட்ட மிட்டு மானிடரைச்
சுட்ட வெடிகள் !
காட்டு மிராண்டி களின்
கை வெடிகள் !
முதுகில் சுமந்து தட்டிய 
நடை  வெடிகள், 
அப்பாவி
அமைதி மனிதர் மீது 
விட்ட இடி வெடிகள் !
பொது நபரைச் சுட்ட 
தனி வெடிகள் !
எப்படி இத்தனை மடி வெடிகள்
ஈழத்தில்  இறங்கின ?
தென் ஆசியா வுக்கு ஏற்று மதியா  
சின்ன வெடிகள்  ?
சிரியாவி லிருந்து 
ஶ்ரீலங்கா
புகுந்த கனல் வெடிகள் !
எச்சரிக்கை இது !
இனி மத வெடிகள் இந்தியாவைக் 
குறி வைக்கலாம் !
9/11 பச்சைக் கொடி
ஆரம்பித்த
மூர்க்கர் இடும் மதப்போர் தான்
மூன்றாம் உலகப் போர் !
 
 
+++++++++++++

துணைவியின் இறுதிப் பயணம் – 6

துணைவியின் இறுதிப் பயணம் – 6

 

 

 

சி. ஜெயபாரதன், கனடா 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go] 

++++++++++++++

[36]

என் கதை     

 

எழுதி, எழுதி

எழுதிக் கொண்டே எழுதி,

எழுதிய பின்னும்

எழுதி,

இன்னும் உருகி எழுதி

என்றும் எழுதி

இப்பிறவி பூராவும் நான் எழுதி

எழுதி வந்தாலும்,

ஆயுள் தேய்ந்து மாய வாழ்வு

அத்தமனம் ஆனாலும்,

என் எழுத்தாணி ழுது

முறிந்தாலும்,

என் துயரம் தீராது !

என்னிதயப் புண் ஆறாது !

என் பிணைப்பு

பாசப் பிடிப்பு மாறாது !

என் னப்புண்,

ன் மனப்புண் போல் தெரியலாம் !

என் அதிர்ச்சி போல்

ன் அதிர்ச்சியும் நேரலாம் !

என் கண்ணீர்த் துளிகளில்

ன் துயர்ப் பிம்பம் காணலாம் !

என் சோகக் கதை

ன் கதையைக் கூறலாம் !

அப்போது,

ன் கண்ணீர்

என் கண்ணீர் ஆகிவிடும் !

 

++++++++++++++++++++

[37]

இரவில் ஓர் அலறல் !

 

அம்மா வுக்கு என்ன

ஆனது ?”

இப்படி ஓர் அலறல்

எழுந்து,

நள்ளிரவில் கேட்டு மேல்

மாடியில் தூங்கும்

என் மூத்த மகள்

துள்ளி எழுந்து விட்டாள்.

என் பேத்தியும்

விழித்துக் கொண்டாள் !

என் வாயில் எழுந்த

அக்குரல்

கீழ் அறையில் தூங்கும்

எனக்கு மட்டும்

என் காதில்

ஏன் கேட்க வில்லை !

 

+++++++++

[38]

உருகி, உருகி

 

ஊனுருகி உள்ள மெல்லாம்

வெந்து சாம்பலாக,

தானுருகி வாழ்வில்

தனக்கெனப் பிறந்தவளை

வானுலகுக் கென்கையால்

மின்கனலில் அனுப்பி,

நானுருகித் தனியனாக

நான்முகன் எழுதி வைத்தான்.

++++++++++++++

[39]

அணையாத கனல்

ஏற்றி வைத்த உன்

மெழுகுவர்த்தி ஒருநாள்

காற்றடிப்பில்

பட்டென அணைந்து விடும் !

எரியும் விளக்குகள்

எல்லாமே

ஒருநாள் அணைந்து போகும் !

உன் உடம்பும்

ஒரு மெழுகு வர்த்தியே !

அதிலே ஆட்சி புரியும்

ஆத்ம உயிரும் ஓர்

தீக்கனல் சக்தியே !

என் வீட்டில் வாழ

ஏற்றி வைத்த

ஓர் கலங்கரை விளக்கு

என் துணைவி !

அவள் நடமாடும் தீபம் !

குப்பெனப் புயலில் அணைந்து

எங்கும் இருள் மயம் !

என் நெங்சில் அப்போது

பற்றிய தீ மட்டும் ஏன்

இன்னும் அணைய வில்லை ?

துணைவிக்கு

அன்று நான் இட்ட தீ

அணைந்தது,

ஆனால் அதனால்

எனது நெஞ்சில் பற்றிய தீ

இதுவரை

அணைய வில்லை ! அது

அணையுமா ? அணையுமா ? என்றும்

அணையுமா ?

+++++++++++++++

[40]

அறுந்த தொப்புள் கொடி

பிறந்த சிசுவுக்கு இருப்பது

ஒன்றில்லை !

தொப்புள் கொடிகள்

இரண்டு !

பெற்ற தாயுடன்

இணைந்தது ஒன்று !

தெரிவது

மனித கண்ணுக்கு !

சேயிக்குத் தெரியாமல்

இயங்கி வருவது

இரண்டாவது தொப்புள் கொடி !

படைப்பாளியுடன்

பிணைந்தது !

ஆத்மப் பிணைப்பு அது !

உயிர்ப் பிணைப்பு !

தெரியும் தொப்புள் கொடி

அறுத்தால்

சேய் தானாய் இயங்கும் !

தெரியாத

தொப்புள் கொடி அறுந்தால்

செத்துவிடும் சேய் !

துணைவிக்கு அறுந்து போனது

பிணைப்புக் கொடி !

+++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

+++++++++++++++

மகாத்மா காந்தியின் மரணம் – ஜனவரி 31, 2019 நினைவு நாள்

Gandhi -12

மகாத்மா காந்தியின் மரணம்

[1869-1948]

சி. ஜெயபாரதன், கனடா

[ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]

நினைவு நாள்

[காந்தீயக் கோட்பாடு]

***********************

காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட  வேண்டும்.

சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி,  உயர்நீதி,  உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.

சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை.  சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை.  சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.

சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி.  சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது.  அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி  பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.

அறநெறி, உரிமை, சமநெறி என்பது முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு.  சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த  நாட்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.

*****************************

அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !

இரவீந்திரநாத் தாகூர்

http://youtu.be/QT07wXDMvS8

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

மகாத்மா காந்தி

Gandhi -1

முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்!  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

Hey Ram

உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

Gandhi's last journey -2

அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்”  என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார்.  ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

Nehru and Gandhi

நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

Tagore and Gandhi

காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

Gandhi and Einstein

40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

Gandhi fasting and Indira

மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

Gandhi -9

‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

Gandhi in UK 1931

கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரிய தல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

Gandhi -10

காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

Samarmathi Ashram

ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார் களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மை யினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

Einstein on Money

காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்பட வேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

News

இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

Gandhi's last journey

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறை களிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

Gandhi with Ratinam

இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.  அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

Einstein qoutes

அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்!  இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

Gandhi -8

 

கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

Gandhi Memorial

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார்.   ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’  மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்!  ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது !  பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!

Birla House Memorial

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

http://youtu.be/QT07wXDMvS8

***************************

தகவல்:

1.  Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

2.  Gandhi His Life & Message for the World By:  Louis Fischer (1954)

3.  The Life of Mahatma Gandhi By : Louis Fischer  (1950/1983)

4.  http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

5.  http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi

6. http://www.mkgandhi.org/assassin.htm

7.  http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahatma_Gandhi

8. https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]

+++++++++++++++++
Mohandas Gandhi Timeline

From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html

https://mail.google.com/mail/?hl=en&shva=1#all/13465cd01bf5bf45

Picture from Gandhi Movie with Ben Kingley as Gandhi [1982]

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2GgK_Nq9NLw

[Mahatma Gandhi Interview]

http://www.columbia.edu/cu/weai/exeas/asian-revolutions/pdf/gandhi-timeline.pdf

https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

http://www.bbc.com/news/world-asia-india-35259671

+++++++++++++++++++

Attachments area

துணைவியின் இறுதிப் பயணம் -3

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

[21]

எழுதிச் சென்ற ஊழியின் கை !

 

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழியிடம்

ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள் 

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

 

++++++++++++++++

[22] 

ஊழியின் எழுத்தாணி

 

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும்

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

 

+++++++++++++

 [23] 

அன்னமிட்ட கைகள்.

 

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது அன்புடன்

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோரே.

 

++++++++++++++++++

 [24]

தங்க ரதம்

 

தங்க ரதம் போல்

வீட்டில் தினம்

உலாவி வருவாள் !

மங்கா ஒளி முகத்தோடு

வீட்டில் தினம்

விளக்கை ஏற்றுவாள்.

தகதகக்கும் அந்த

தங்க மேனியாளை

திருமணத்தில் கைப் பற்றிய நான்,

இறுதியாக

என்னிரு கைகளால்

எரியும் மின்சார நெருப்பிலே நான்

தள்ளினேனே ! நான்

தள்ளினேனே !

++++++++++++++++

[25]

[ஆயுள் சான்றிதழ்]

[Life Certificate]

 

ஓய்வு ஊதியம் பெறுவதற்கு

ஓவ்வோர் ஆண்டும்

ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்

அவசியம்.

இந்திய அரசாங்க ஆணையர்

நவம்பர் மாதம்

முதல் வாரம் அளிப்பார்

முத்திரை குத்தி !

தம்பதிகள் இருவரும் புறப்பட்டோம்.

பயணம் துவங்கியது.

பாதி வழியில்

இருளும் மாலை நேரத்தில்,

திடீரெனத் துணைவி

இரத்தக் குழல் குமிழியில்

நேர்ந்தது வெடிப்பு !

உள் பூகம்பம் !

நாள் காட்டியில்

காலன் என்றோ குறித்து வைத்த

நவம்பர் ஒன்பதாம் நாள் !

அடுத்தோர் 9/11

அபாய மரண நிகழ்ச்சி

நேரும்

ஓருயிருக்கு !   

முடிவில் நடந்தது என்ன ?

எனக்குக் கிடைத்தது

அரசாங்கத்தின்

ஆயுள் சான்றிதழ்.

என்னருமைத் துணைவிக்கு

எமனின் 

மரணச் சான்றிதழ் !

 

++++++++++++

 [26]

மரணம்

 

மானுட  இனத்துக்கு

மரணம் என்பது

புதிதல்ல !  

மரணம்  என்பது

பொல்லாது ! 

உயிருடன் வாழ்வோரைத் தினமும்

கொல்லாமல் கொல்வது !  

மரணம் என்பது

விதியல்ல என்று நீ

சொல்லாதே !

மதியால் நீ விதியை

வெல்லலாம் என்று சொல்லிக்

கொள்ளலாம். 

ஆனால்

மரணத்தை வெல்ல

முடியுமா !

பிறப்பும், இறப்பும்

உயிரின வாழ்க்கையின்

இருதுருவங்கள்.

பிறந்தவர்

ஒருநாள் இறப்பவர் தான் !  

இறப்பவர் மீண்டும்

பிறப்பர்

என்பது தெரியாது !

மரணம் புதிதல்ல என்று

உரைத் தெனக்கு

ஆறுதல் கூற வராதீர் !

மரணம் விதியல்ல என்று

இறையிடம்

முறையிடுவேன் !

மரணம்

அரக்கர் தொழில் !

மானிடப் படைப்பைச் சீராய்

உருவாக்கிய பிறகு  

ஊனுருகப் பறிப்பது தான்

உன் அறுவடையா ?

அல்லது

அறநெறியா ?

 

+++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

துணைவியின் இறுதிப் பயணம் -2

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன்,  ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

+++++++++++++

துணைவியின் இறுதிப் பயணம் – 2

[6]

நேற்று,

 

நேற்று

ஒளிகாட்டி, வழிகாட்டி

நடமாடிய தீபம்,

புயல்

காற்றில்

அணைந்து போய்,

வீட்டுச் சுவரில்

படமாகித் தொங்கும்

இன்று,

மாலை போட்டு !

+++++++++++++++++ 

[7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
ன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போய் விட்ட பிறகு
அதன் இழப்பு தான்,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது  !

+++++++++++++

[8]

புனிதவதி

 

 

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,     
ஒருமுறை நான் பார்த்து                                                                     
ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள்
ஐம்பத் தாறு ஆண்டுகள்     
என் வானில்                                                                                             
ஆதவன் உதித்தான் !
ஆனால் இன்று
நின்ற போன தவள்
கைக் கடிகாரம்.

 

+++++++++++++++

[9]

ஒருவரி

ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம்
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
ட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் கிழிந்து குருதி
கொட்டும் !
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி                                                                   கண்டேன் !                                                                                                           வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அறுவை முறை
வெற்றியே !
ஆனால்
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

[11]

எழுதப் பட்டிருக்கிறது !

எப்படித் துவங்கும் அவள்
இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

++++++++++++++++

[12]

கண்ணீர்த் துளிகள்

எனது கண்ணீர்
மது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து
காலவெளி
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++++++++++++++

[13]

உயிர்த்தெழுவாள் !

 

விழித்தெழுகஎன் தேசம்

என்னும்

கவிதை நூல்

எழுதி வெளியிட்டேன்.

ஆனால்

என் துணைவி,

அறுவை சிகிட்சையில்

விழிதெழ வில்லையே என

வேதனைப் பட்டேன்.

இந்துவாய் வாழ்ந்து

பைபிள் பயின்று

கிறித்துவை நம்பும்

உன் துணைவி

உயிர்த்தெழுவாள்என்று

ஓர் அசரீரிக் குரல்

ஒலித்தது உடனே

வெளி வானில் !

 

+++++++++++++

[14]

நேற்று 

 

நேற்று

ஒளிகாட்டி, வழிகாட்டி

நடமாடிய தீபம்

புயல்

காற்றில் அணைந்து,

ஓவியமாகி

வீட்டுச் சுவரில் நினைவுப்

படமாகித்

தொங்குகிறது

இன்று

மாலையோடு !

++++++++++++

[15]

பெருங் காயம் !

உயிர்மெய்க் காயம்

பொய்யாம் !

மண்ணிலே தோன்றிய

பெண்மணிக்கு

எத்தனை,

எத்தனை அணிகள் !

ஜரிகைப் பட்டு

ஆடைகள் !

ஒப்பனைச் சாதனம் !

அனைத்தையும்

விட்டுப்

போனது துணைப் புறா,

இப்போது

துருப்பிடிக் காத

ஒரு கும்பா வுக்குள்

எரி சாம்பலாய்,

அவள் நீடித்த

குடியிருப்பு !

+++++++++++++++                                  

[16]

தொட்ட இடம் !

இவ்வுலகில்

முப்பத்தாறு ஆண்டுகள்

மூச்சிழுத்த

இல்லத்தைப் பூட்டி விட்டுப்

போனவள்,

மீண்டும் திறக்க இங்கு

வரவில்லை !

வீட்டில்

தொட்ட இடம், துடைத்த இடம்

தூய்மை இழந்தன !

சுட்ட சட்டி, அறைத்த

அம்மி

விம்மி, விம்மி

அழுதன !

துவைத்த உடை காயாமல்

ஈரமாய் உள்ளது !

பண்ணிய வடை

இனித் தின்பாரற்று

ஊசிப் போகுது !

மண்ணாகி

மீளாத் துயிலில்

அவள்

தூங்கும் இடம் இப்போது

விண்ணாகிப்

போனது !

++++++++++++++++

[17]

ஆபரணங்கள்

பெண்ணுக்குப்

பொன்னாசை உள்ளது !

உயிர் உள்ளவரை மேனியில்

அணிகள் ஒளிவீசும் !

உயிர் போன பிறகு

எதுகை, மோனை

எதற்கு ?

உபமானம், உபமேயம்

எதற்கு ?

உடை யில்லாத

உயிர்மெய்

சொல்லுக்கே

வல்லமை அதிகம் !

உயிர்மெய்

உலகை விட்டுப் போன

பிறகு

உன் சோக வரலாறு

சொல்ல

இலக்கணம் எதற்கு ?

தலைக் கனம்

போதும்.

+++++++++++++++++++

[18]

இறுதிப் பயணம்

முப்பதாவது நாளின்று !

போன மாதம்

இதே நேரம், இதே நாளில்,

ஓடும் காரில்

பேரதிர்ச்சியில்

இரத்தக் குமிழ் உடைந்து

உரத்த குரல்

எழுந்தது என்னருகே !

ஃபோனில்

911 எண்ணை அடித்தேன் !

அபாய மருத்துவ

வாகனம் அலறி வந்தது

உடனே !

காலன் துணைவியைத் தூக்க

நேரம் குறித்தான் !

ஏக்கத்தில் தவிக்கும் நான் !

நவம்பர் 9 ஆம் நாள்,

இதுவுமோர் 9/11 ஆபத்து தான் 

மாலை மணி 6 !

நடுத்தெரு நாடக மாகி,

சிறுகதை யாகி

பெருங்கதை யாகி,

இறைவன்

திருவிளை யாடல் 

வரலாறாய்த்  துவங்கும் !

++++++++++++++

[19]

[டிசம்பர் 9 ஆம் நாள்]

அந்த வெள்ளிக் கிழமை

அற்றைத் திங்கள்

அந்த வெள்ளிக் கிழமை

எந்தன் துணைவியும் இருந்தாள் !

அவளோடு ஒட்டி

நானும் இருந்தேன்.

வீட்டு விளக்கு

வெளிச்சம் தந்தது !

இற்றைத் திங்கள்

இந்த வெள்ளிக் கிழமை 

என் துணைவியும் இல்லை !

தனியனாய் நான்

பிரிவு நாள் அது.

பெரிய துக்க நாள் அது !

+++++++++++++++++++

[20]

என் இழப்பை நினை !

ஆனால் போகவிடு எனை !

ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

பயண முடிவுக்கு நான் வந்த பிறகு

பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,

கருமாதி எதற்கு துக்க அறையில்,

கதறல் எதற்கு விடுபடுது ஆத்மா ?

என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்

இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,

நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,

இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,

இப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,

ஊழித் தளபதி இடும் திட்டம் இவையெலாம்.

ஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.

தனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது

உனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,

உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை.

+++++++++++++++++++++++++

 ஆங்கில மூலம்

[21]

எழுதிச் சென்ற ஊழியின் கை !

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழிடம்

ஒரே ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள்  

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

++++++++++++++++

[22]

ஊழியின் எழுத்தாணி

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும் ! 

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

+++++++++++++

[23] 

அன்னமிட்ட கைகள்.

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோர்.

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

 

 

துணைவியின் இறுதிப் பயணம்

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன்,  ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

+++++++++++++

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்,வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

மனைக்கு விளக்கு மடவாள்.

நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.

[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

+++++++++++

[1]

படமாகிப் போனாள்\!

நடமாடும் தீபம் புயலில்
அணைந்து போய்,
சுவரில்
படமாகித் தொங்கும் !
வாழ்வு
இடம் மறந்து போகும்
பூமியில்
தடம்  அழிந்து சோகம் !
விட்டு
விடுதலை யாய் ஏகும் !

+++++++++++

[2]

சொல்லாமல் போனாள்

பூவோடு போனாள் !
நெற்றிப்
பொட்டோடு போனாள் !
மங்கலத்
தாலி யோடு போனாள் !
பொங்கி
தவிக்க விட்டுப் போனாள்.
தங்க ரதம் போனது
திரும்ப வில்லை.
இல்லைத்தை பூட்டி செல்லும் போது
சொல்லாமல் போனாள்.

+++++++++++

[3]

தனிப்பறவை

துணைப் பறவை போனது
துடிப்போடு !
தனிப் பறவை நான்
தனியாய்க் குமுறி
தவிக்க விட்டுப் போனது !
இனி வீட்டில்
காத்திருக்க எனக்கு
எனது இல்லத்தரசி ஏது ?
உணவு ஊட்டும்
வளைக் கரங்கள் ஏது ?
கண்ணோடு
கண் இணை நோக்கிக்
கனிவு கொடுக்கும்
பெண் ஏது ?

+++++++++++

 [4] 

நொடிப் பொழுதில்

துடி துடித்துப் போனதே என்
துணைப் புறா !
என் நெஞ்சில்
அடி அடித்துப் போனதே என்
ஆசைப் புறா !
இடி இடித்துப் போனதே என்
இல்வாழ்வில் !
நொடிப் பொழுதில்
முடிந்து போகும் அவள்
தொடர் கதை !
கண் திறந்து நோக்கி
கடைசியில்
கை பிடித்துப் பிரிந்ததே என்
கவின் புறா !

+++++++++++

[5] 

முடிந்த கதை

இதய வீணை கை தவறி
உடைந்த பிறகு
இணைக்க முடியுமா ?
புதிய கீதம் இனி அதிலே
பொங்கி எழுமா ?
உதய சூரியன் எனக்கினி மேல்
ஒளியும் வீசுமா ?
விதி எழுதி முடித்த கதை
இனியும் தொடருமா ?

+++++++

[6]

நேற்று,

நேற்று
ஒளிகாட்டி, வழிகாட்டி
நடமாடிய தீபம்,
புயல்
காற்றிலே
அணைந்து போய்,
வீட்டுச் சுவரில்
படமாகித் தொங்கும்
இன்று,
மாலை போட்டு !

++++++++

[7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
உன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போன பிறகு தான்
அதன் இழப்பு,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது !

+++++++++++++

[8]

புனிதவதி

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,                                                                                          ஒருமுறை நான் பார்த்து                                                                                         ஒப்பிய திருமணம்.
என்னை ஏற்று மணந்தாள்,
இல்லத் தீபத்தை
ஏற்றினாள்,
ஐம்பத் தாறு ஆண்டுகள்,                                                                                       ஆதவன் உதித்தது ! அத்தமித்தது !
ஆனால் இன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.

+++++++++++++++

[9]

ஒருவரி

ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது,
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம் இப்படி
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
பட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் உப்பிக் கிழிந்து                                                                                குருதி கொட்டும் !                                                                                    நில்லாது
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி                                                                     கண்டேன் !                                                                                                                 வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அபாய அறுவை முறை
வெற்றியே !
ஆனால்                                                                                                              இறுதியிலே
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

[11]

எழுதப் பட்டிருக்கிறது !

எப்படித் துவங்கும் அவள்                                                                     இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !  முன்பே                                                                                 திட்டமிடப் பட்டது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

++++++++++++++++

[12]

கண்ணீர்த் துளிகள்

எனது கண்ணீர்
உமது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து,                                                                                            பாரெங்கும் பரவி
காலவெளி,
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.