ராமாலயம் யாருக்கு ?
சி. ஜெயபாரதன், கனடா
இந்து கோயிலை இடித்து
வந்தேறி வேந்தர்
தம் கோயில் கட்டினார் முன்பு.
புத்தர் பிறந்த பூமியில்
மெத்தச் செலவில், வில் வேந்தன்,
வித்தகன் ராமனுக்கு
உத்தம னுக்கு
கட்டுகிறார் இப்போது
ஓர் உன்னத ராமாலாயம் !
கோயில் உள்ளே வைக்கும் சிலைகள்
ஒன்றா ? இரண்டா ?
சேர்ந்தா ? தனித்தா ?
மதுரையில் ஏனோ தனிமை
மீனாட்சி !
பொய் புனைந்தான்,கம்பன் !
கம்ப ராமன்
காசினி மைந்தன்
ஈசன் அல்லன்.
ஒற்றை மா மனிதன் ராமன் !
ஏக பத்தினி வேந்தன்
நீதி வழங்காது
சீதைக்கு கடும் தண்டனை
இட்ட மேதை !
ராமாலயம் கட்டுவது
கம்ப ராம னுக்கு இல்லை,
சீதா ராமனுக்கு !
*******************************