கம்பன் எழுதாத சீதாஞ்சலி

Scene -6 Seetha left by Rama with Twins

கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

சி. ஜெயபாரதன், கனடா 

********************************

பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில் 

வில்லாதி வீரன் ராமனை,, 

உத்தம ராமனாய்,  

உன்னத ராமனாய் உயர்த்திய 

கம்பன் கை தளர்ந்து, 

எழுத்தாணி ,  

ஓலையில் 

எழுத மறுத்து அழுதது ! 

உச்சத் துயர் நிகழ்ச்சி  

சீதைக்கு  

இரண்டாம் வனவாசம் ! 

எதிர்பாரா 

இறுதிப் பயணம் ! 

கம்பன் எழுதாமல்  

கை விட்ட ராம கதை 

உத்திர காண்டம், 

சீதாஞ்சலி ! 

சிங்காதனம் ஏறிய ராமன் 

ஜெகம் புகழும் 

கம்ப ராமன் 

சீதா ராமன் அல்லன் ! 

தீக்குளித்த தூயவளை  

நம்பாதவன், 

மாற்றான்  

மடியில் வைக்கப் பட்டு 

வேற்றான்  

மனையில் சிறைப் பட்டவள்.  

கறை பட்ட சீதா  

பொது மக்கள் புகார்  ! 

பாஞ்சாலி சபதத் துக்கு  

கண்ணனால் 

கீதை சொல்லப் பட்டது. 

ஆனால், அபலை 

சீதாவுக்கு, 

கர்ப்பிணி மாதுக்கு, 

தீர்ப்பில்லா  

ஆயுள் தண்டனை ! 

இரண்டாம் வனவாசம் ! 

சீதாஞ்சலி ! 

********************************

******************************** 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.