ஆடும் அழகே அழகு

செர்ன் அணு உடைப்பு ஆய்வகம்

பிரெஞ்ச் – சுவிஸ் எல்லை

**********************************************

சி. ஜெயபாரதன், கனடா

ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ
ஆடும் அழகே அழகு.

ஆடும் அழகே அழகு – உனைத்
தேடும் விஞ்ஞான உலகு.

ஏடும், பாரத நாடும், பாட நீ
ஆடும் அழகே அழகு, தமிழ்
நாடும்,ஏடும், பாடும், தேடும்
ஆடல் அரசே,கூடல் சிவமே நீ
ஆடும் அழகே அழகு.

அணு உடைப்பு ஆய்வக வாசலில்
நாடி வரவேற்கும் பிரஞ்ச் எல்லையில் நீ
ஆடும் அழகே அழகு, அங்குனைத்
தேடும் விஞ்ஞான உலகு.

ஆதி மூலன் நீ !  அகிலம் படைத்தது நீ
அணுவுக்குள் நீ ! அகிலத்தில் நீ !
அண்ட சராசரம் அனைத்திலும் நீ
ஆடும் அழகே அழகு
.

ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு
தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து
ஆடும் அழகே அழகு – கம்பீர மாய் நீ
ஆடும் அழகே அழகு
.

நெற்றிக் கண்ணன் ஒற்றைக் காலில்,
ஆடும் அழகே அழகு.
வெற்றிச் சங்கு முழங்க முற்றும் அதிர நீ
ஆடும் அழகே அழகு.

ஒரு கையில் அக்கினி ஏந்தி
மறு கையில் உடுக்க டிக்கும் கூத்தாடி நீ
ஆடும் அழகே அழகு. உ்னைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.

ஆதி முதல்வன் நீ !  அண்டக் குயவன் நீ !
ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமன் நீ !
நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்பவன் நீ !
வேத ஞானி நீ ! மேதினி செழிக்கநீ

ஆடும் அழகே அழகு,  அவனியில்
நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு !
நின்றால் பூமியே நின்று விடும்
உயிரினம் அழிந்து விடும், தொடர்ந்து
ஆதி சக்தி நீ ஆட வேண்டும், நாம் தினம்
ஓதி உன்னைப் பாட வேண்டும்
.

ஆடும் அழகே அழகு. உனைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
தேடும் மாந்தரைக் காப்பாய் நீ
சாடும் மனிதரை மீட்பாய் நீ

ஆடும் அழகே அழகு
தில்லையில், பிரெஞ்ச் எல்லையில் நீ
ஆடும் அழகே அழகு கம்பீரமாய்
ஆடல் அரசே கூடல் சிவமே.

************************************

பதிவாசிரியரைப் பற்றி

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு].

See author’s posts

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.