ஆகாவென்று எழுந்தது பார் !
பூகோளச் சூடேற்றம் !
பேரளவு பெரு வெள்ளம் ஓடும் !
பேய்மழைப் பூதம்
வாய் பிளந்து
தாகம் தீர்த்துக் கொண்டது !
கோர மெங்கும் கேரளாவில் !
வீடுகள் சரிந்தன !
வீதிகள் நதியாயின !
பாதைகள் மறைந்தன !
பாலங்கள் முறிந்தன !
நாடு, நகரம், வீடு யாவும்
ஓடும் ஆற்றில்
ஓடங்கள் ஆயின !
சீர்வளச் செல்வம் யாவும்
நீரோட்ட வெள்ளம்
அடித்தோடுது !
கண்ணீர் விடுவோம் !
கவலைப் படுவோம்,
நிதி அளிப்போம்,
உதவி தருவோம்,
ஆனால்
ஈர நெஞ்சம் கொண்டு
கேரளா
நீர் விடுமா
நிலமாய்க் காய்ந்து போன
வைகைக்கு ?
+++++++++++++++


Pingback: கேரளாவிலே அசுரப் பேய்மழை – TamilBlogs
People like k.r. narayanan are one of the cause for human slaughter in Sri Lanka. Tamils should not forget