வேதனை விழா
சி. ஜெயபாரதன், கனடா
ஆதாம் ஏவாள் பிறந்த மேனியில்
காதலர் தின வாழ்த்து
ஓலையில் எழுதிய முதலிரு
காதலர் !
காதல் என்பது கனவு,
களவு, உறவு, பிரிவு, துறவு !
இரகசியத் தேடல் !
முரசத்தில் அடித்து அதை
முத்திரை செய்வது
முறை ஆகுமா ?
காதற் புறாக்கள் தூது போய்ப்
பாதிக்கப் படும்
வேதனை விழா இது !
நீதியும் போதனையும்
வேதமும் மருந் தில்லை
காதலர் புண்ணுக்கு !
நீயும் நானும்
ஓயாக் கடல் மேல்
பாய்மரப் படகில் போகிறோம் !
இலக்கணம் தவறி
எம்மே பட்டம் பெறாதர் நாம் !
பாதை தவறிப் போய்க்
காதல் தீவிலே
மோதிக் கிடக்கிறோம் !
காதலர் தின நினைவு
காதலரை முடுக்கவா ?
ஒடுக்கவா
அல்லது தடுக்கவா ?
++++++++++++++++