படைப்பாளி

சி. ஜெயபாரதன், கனடா

படைப்பும் நானே
படைத்ததும் நானே
திட்டமும் நானே
திட்ட மிட்டதும் நானே.
அணுவும் நானே
அகிலமும் நானே
ஆதியும் நானே
அந்தமும் நானே
ஒளியும் நானே
இருளும் நானே
எங்கும் நானே
இல்லாததும் நானே
உயிரும் நானே
உடலும் நானே
கல்லும் நானே
கடலும் நானே
புல்லும் நானே
புழுவும் நானே
பிறப்பும் நானே
இறப்பும் நானே
இளமையும் நானே
முதுமையும் நானே
வளமையும் நானே
வறுமையும் நானே
கறுப்பும் நானே
வெளுப்பும் நானே
உருவ மில்லை எனக்கு
அருவத் தோற்றம் எனக்கு
ஒளிமய மான நான்
உலவுவது காரிருளில் தான்.

+++++++++++++++++++++++