அழகின் விளிப்பு
சி. ஜெயபாரதன், கனடா
அழகினைக் கண்டால், உளம்போய்
அடிமை ஆகுதடி !
நிழலினைப் போல, தொடர்ந்து
நெருங்க ஆசையடி !
கற்ற மறையெல்லாம் ஒருகணம்
காற்றில் பறக்குதடி !
ஒற்றரைப் போல ஒளிந்தே
உளவச் செல்லுதடி !
சுற்றுப் புறமெல்லாம் மறந்து
சூனிய மாகுதடி !
முற்றுகை செய்யுதடி துணைக் கோளாய்
முழு உணர் விழந்தபடி !
பட்டப் பகலிலும் கனவுகள்
பளிச்சிடு கின்றதடி !
வட்டப் புள்ளி போல கோலமிட்டு
வலம் வருகுதடி !
++++++++++++++++++++++++++++++