Now that the Event Horizon Telescope collaboration has released its image of the Milky Way’s black hole, the team is focusing on making movies of the two photographed black holes and finding other distant black holes large enough to study
An image of the Messier 87 black hole, showing, for the first time, how it looks in polarized light. The lines mark the orientation of polarization, which is related to the magnetic field around the shadow of the black hole.
உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை
இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும் கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள் உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம் இது. மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக மதிப்பிடப் படுகிறது.
அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது. 6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது. அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87] மையத்தில் உள்ளது. கருந்துளைகளுக்குச் “சுழற்சி” [Spin] உள்ளது. மையக் கருந்துளை அருகில் வரும் பிண்டத்தையோ, அண்டத்தையோ, விழுங்கி, அதன் நிறை மிகையானால், சுழற்சியின் வேகம் அதிக மாகிறது.
First, the researchers will have to examine the data they have already collected. The images of Sgr A* and M87* were both assembled from data gathered in 2017, but there have since been two more observation periods, with extra telescopes added to the collaboration’s original network of eight.
“Data does exist. We have taken data in 2018 with one additional telescope, 2022 with three additional telescopes, and we are working very, very hard to get that to you… as soon as we possibly can, but I can’t make any promises about when,” said EHT researcher Lia Medeiros at the Institute for Advanced Study in New Jersey during a 12 May press event. It will probably take years before the results of that analysis are released, she said.
One thing this work is expected to clarify is the structure of the material around Sgr A*, particularly the three bright “knots” of light seen in the new image. Because of the way the image was made, the bright spots could just be artefacts. “Those knots tend to line up with the directions in which we have more telescopes,” said EHT researcher Feryal Özel at the University of Arizona during the press event. “Even though it’s natural in theory to expect these brighter spots, we don’t trust them in our data that much yet.”
Mars Samples in Orbit (Illustration): This illustration shows NASA’s Mars Ascent Vehicle (MAV), which will carry tubes containing Martian rock and soil samples into orbit around Mars, where ESA’s Earth Return Orbiter spacecraft will enclose them in a highly secure containment capsule and deliver them to Earth. Credit: NASA.
2030 ஆண்டுகளின் மத்திமத்தில் அமெரிக்க நாசாவும், ஐரோப்பிய விண்வெளிப் பேரவை ஈசாவும் இணைந்து, மனிதர் இயக்கா விண்சிமிழ் அனுப்பிச் செவ்வாய்க் கோள் மண் மாதிரிகளைச் சேமித்து, பூமிக்கு மீட்டுவர திட்டங்கள் தயாராகி வருகின்றன. செவ்வாய்த் தளவுளவி ‘விடாமுயற்சி’ [MARS PERSEVERANCE ROVER] சுய இயங்கி வாகனப் பயணம் முதற் கட்டப் பயிற்சி. செவ்வாய்த் தளத்தில் உள்ள ‘ஜேசிரோ குழித்தலம்’ [JEZERO CRATOR] தேர்ந்தெடுக்கப் பட்டு, பாறை மாதிரி மீட்பு குறிப்பணி இருமுறை திட்டமிடப்படும். முதல் குறிப்பணி விண்சிமிழ் நேராக ஜேசிரோ குழித்தலத்தில் இறங்கி மண் மாதிரிகளைச் சேமித்து, வேறொரு சிமிழ் மூலம் பூமிக்கு அனுப்பப்படும். இரண்டாம் குறிப்பணி யில் செவ்வாய்க் கோள் சுற்றுப் பாதையில் சுற்றும் விண்சிமிழ் ஒன்றில் உள்ள மண் மாதிரிகள் மீட்கப் பட்டு, பூமிக்கு கொண்டுவரப்படும். இதுபோல் பூமிக்கு நேரே வரும் மாதிரி மண்ணை நூதன முறையில் சோதிக்கும் போது தான் செவ்வாய்க் கோளில் உயிரினத் தோற்றம் இருந்ததை மெய்ப்பிக்க முடியும். அந்த முயற்சிக்கு ராகெட் டிசைன், இயக்க ஆளுநராக நாசா அமெரிக்கப் பெண் எஞ்சினியர் ஆஞ்சி ஜாக்மன் நியமிக்கப் பட்டார்.
A NASA-led Sample Retrieval Lander launches to Mars in the mid 2020s, carrying with it an ESA-led sample fetch rover and a NASA-led Mars rocket. The lander would touch down close to Perseverance’s landing location, Jezero Crater, and deposit the fetch rover. Lead: Jet Propulsion Laboratory
Project Manager for NASA’s Mars Ascent Vehicle: Angie Jackman, Mars Ascent Vehicle project manager at NASA’s Marshall Space Flight Center in Huntsville, Alabama, holds an example of one of the sample tubes the agency’s Perseverance rover will fill with Martian rock and regolith, to be returned to Earth for scientific study. Credits: NASA
செவ்வாய்க் கோள் மண் மாதிரி மீட்டுவரும் சுய இயங்கி மின்சிமிழ்
செவ்வாய்க் கோள் பாறை மாதிரி கொண்டுவரும் ராக்கெட் வாகனம் தயாரிக்கும் ஆஞ்சி ஜாக்மன் பொறியியல் விஞ்ஞானிக்கு 35 வருட மேம்பட்ட விண்வெளி நுணுக்கம் இருக்கிறது. அத்துறைக்கு வேண்டிய கட்டுமானத் திறம், வெப்ப யந்திரச் சாதனங்கள், ராக்கெட்டுகள், கருவிகள் ஆகியவற்றில் அனுபவம் உடையவர்.
Mars Ascent Vehicle (Illustration): This illustration shows NASA’s Mars Ascent Vehicle (MAV) in powered flight. The MAV will carry tubes containing Martian rock and soil samples into orbit around Mars, where ESA’s Earth Return Orbiter spacecraft will enclose them in a highly secure containment capsule and deliver them to Earth. Credits: NASA
Sample Return Concept Illustration
April 21, 2022
This illustration shows a concept for multiple robots that would team up to ferry to Earth samples collected from the Mars surface by NASA’s Mars Perseverance rover.
NASA and ESA (European Space Agency) are developing concepts for the Mars Sample Return program designed to retrieve the samples of Martian rocks and soil being collected and stored in sealed tubes by Perseverance. In the future, the samples would be returned to Earth for detailed laboratory analysis.
5 Things to Know
1 The first time several vehicles would land (a lander, a rover, and a rocket) on the surface of Mars at the same time.
2 First launch from the surface of another planet with the Mars Ascent Vehicle.
3 First international, interplanetary relay effort using multiple missions to bring back samples from another planet.
SpaceX lifts off on historic space mission to ISS l GMA The Crew-4 mission includes 33-year-old NASA astronaut Jessica Watkins, who will be the first Black woman to live on the International Space Station for a long-term mission.
முதன்முதல் ஸ்பேஸ் X உள்ளூக்கி -4 விண்சிமிழ் நான்கு பொது ஆய்வாளரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது.
2022 ஏப்ரல் 27 இல் அமெரிக்கா பிளாரிடா நாசா கென்னடி ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் X மீள்பயன்பாடு ஃபால்கன் [REUSABLE] ராக்கெட் நான்கு பொதுநபரை உள்ளூக்கி-4 [INSPIRATION -4] விண்சிமிழ் தூக்கிச் சென்று, முதன்முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது. விண்வெளி நிலையம் பூமிக்கு 250 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. விண்சிமிழ் 350 மைல் உயரத்தில் பூமியை மூன்று நாட்கள் சுற்றி முதன்முதல் சுற்றுலாப் பயணம் செய்து, கீழிறங்கி நிலையத்துடன் இணைந்தது. அந்த மூன்று நாட்கள் பயணம் செய்த நான்கு விஞ்ஞானிகள் உடல்நிலை சோதிப்பு செய்வார். அந்த பொது விஞ்ஞானிகள் 38 வயது ஜார்டு ஐஸாக்மன், 29 வயது ஹேலி ஆர்செனா, 41 வயது கிரிஸ் செம்பிராக்ஸி, டாக்டர் சியான் பிராக்டர். அவர்கள் யாவரும் விண்வெளிப் பயிற்சி பெற்றவர். ஒவ்வொரும் இதற்கு 55 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார். .
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை ஏற்றிச் சென்று மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப் பாக இறக்கியது.
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார்.
Space X Landing back towards, the Earth, After two weeks.
ஸ்பேஸ் X இயல்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
ஸ்பேஸ் X விண்சிமிழ் வெற்றிகரமாக கடல் நீர் மீது இறங்கியதைப் பாராட்டி போது, திட்ட ஆளுநர் எலான் மாஸ்க் [Elon Musk] . “இந்த வெற்றி நாங்கள் நிலவுக்குப் போகும் திட்டத்தையும், நிலாக் குடிவசிப்பு திட்டத்தையும் மெய்ப்படுத்தி உள்ளது. நான் பெரிய மத நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால் இது வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்று கூறுகிறார் எலான் மஸ்க் விண்வெளித் தேடல் விஞ்ஞானி. ஸ்பேஸ்X விண்சிமிழ் பூமியில் இறங்குவதற்குத் தகுந்த சுற்றுப் பாதைக்கு நெருங்கி, காற்று மண்டலத்தைக் கடக்கும் போது, உராய்வு உஷ்ணம் 3500 டிகிரி F [1900 C], பயண வேகம் 17,500 mph [28,000 kph] . இறங்கும் போது இரண்டு பாராசூட் குடைகள் விண்சிமிழைத் தாங்கி, வேகத்தை 15 mph ஆகக் குறைத்தன.
அடுத்த ஸ்பேஸ்X திட்டம் செப்டம்பர் இறுதியில் நான்கு விண்வெளி விமானிகள் [மூன்று அமெரிக்கர் + ஒரு ஜப்பானியர்] அகில விண்வெளி நிலையத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆய்வுகள் செய்து, பூமிக்கு மீள்வர்.
SpaceX rocket returns to shore after historic astronaut launch
The first stage of the SpaceX Falcon 9 rocket that launched the Demo-2 mission on May 30, 2020, arrives in Florida’s Port Canaveral on June 2, 2020. (Image credit: SpaceX via Twitter)
2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31 ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இருவிமானி களும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.
நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில் நிலவில் தடம் வைத்தார். பூமியைச் சுற்றி வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் சிலநேரம் தங்கிச் சுற்றுலாப் பயணம் செய்ய நிற்கிறார் வரிசையில் புவி மனிதர் ! நவயுகத் தரை நபர்கள் இனிமேல் விண்கப்பல் புவிச் சுற்றில் சுற்றுலா வருவர் ! கனவில்லை இது ! மெய்யான நிகழ்ச்சி ! வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.
நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா
இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]] புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது. 2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது. ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு. அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.
தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.
அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.
++++++++++++++++++++++++++++++
நாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும் புது முயற்சி.2020 ஆண்டில் விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும் தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன. ஆனால் எப்போது என்று இன்னும் தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர், பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர். அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி பிஸோஸ் [Jeffery Bezos] . இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.
வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை. பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில்[Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார். முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது. இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் ! மிக மலிவு. விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.
வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார். தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும். சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம். காலிஃபோர்னியா மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில் விண்கப்பல் பறந்தது. பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது : இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார். விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி. விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.
ஒரு கையில் அக்கினி ஏந்தி மறு கையில் உடுக்க டிக்கும் கூத்தாடி நீ ஆடும் அழகே அழகு. உ்னைப் பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
ஆதி முதல்வன் நீ ! அண்டக் குயவன் நீ ! ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமன் நீ ! நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்பவன் நீ ! வேத ஞானி நீ ! மேதினி செழிக்கநீ
ஆடும் அழகே அழகு, அவனியில் நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு ! நின்றால் பூமியே நின்று விடும் உயிரினம் அழிந்து விடும், தொடர்ந்து ஆதி சக்தி நீ ஆட வேண்டும், நாம் தினம் ஓதி உன்னைப் பாட வேண்டும்.
ஆடும் அழகே அழகு. உனைப் பாடும் சீடரை ஆசீர்வதி நீ. தேடும் மாந்தரைக் காப்பாய் நீ சாடும் மனிதரை மீட்பாய் நீ
ஆடும் அழகே அழகு தில்லையில், பிரெஞ்ச் எல்லையில் நீ ஆடும் அழகே அழகு கம்பீரமாய் ஆடல் அரசே கூடல் சிவமே.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு].
மண்ணை நம்பி மரம் இருக்குது செல்லப் பாப்பா. மழையை நம்பி மண் இருக்குது நல்ல பாப்பா. காற்றை நம்பி மழை பொழியுது கண்ணு பாப்பா. மரத்தை நம்பி குருவி வசிக்குது கருத்த பாப்பா. பயிரை நம்பி பறவை தேடுது உறவு பாப்பா. உயிரை நம்பி உடல் உள்ளது கண்ணு பாப்பா. உடலை நம்பி உயிர் இருக்குது சின்ன பாப்பா. தாயை நம்பி தொட்டிலில் சேய் தூங்குது செல்லப் பாப்பா. சேயை நம்பி தாயும் பால் கொடுப்பாள் தங்கப் பாப்பா. பெத்த தாய் ஏன் பெண் சிசுவை அழிப்பதெனக் கேளு பாப்பா ? குப்பைத் தொட்டியை எட்டிப் பார்த்தால் “இங்கா, இங்கா” மழலை கேட்குது தங்கப் பாப்பா. முதியோரைக் கண்காணிப்பு இல்லத்திலே தள்ளுவது ஏனென்றும் கேளு பாப்பா? ஊருலகில் வாழ்வதற்கு யாரை நம்பி யார் இருக்கார் கூறு பாப்பா ?
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி
முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.
காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்
காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!
40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.
காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.
மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்
பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.
சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.
‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.
மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.
கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!
கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!
இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரிய தல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’
அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’
1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.
காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!
ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!
பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?
வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார் களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மை யினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.
காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.
‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்பட வேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!
இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறை களிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!
இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!
அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !
மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!
கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!
மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி
முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
+++++++++++++++++
Mohandas Gandhi Timeline
October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi
1883: Gandhi and Kasturbai are married.
1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father
September 4, 1888: Gandhi leaves for England to study law.
June 10, 1891: Gandhi passes the bar exam in England.
1891-1893: Gandhi fails as a lawyer in India.
April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.
Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.
Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.
December 1896: Gandhi returns to South Africa with his family.
October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.
1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.
1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.
1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”
July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”
January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.
October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.
1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.
November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.
June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.
July 18, 1914: Gandhi sails to England.
August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).
January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.
May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.
April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.
April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.
August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.
March 10, 1922: Gandhi is arrested for sedition.
March 1922-January 1924: Gandhi remains in prison.
1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.
1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.
February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.
January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.
March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.
March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.
May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.
January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).
Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.
December 28, 1931: Gandhi returns to India.
January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.
September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.
1934-38: Gandhi avoids politics, travels in rural India.
1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.
September 1939: World War II begins, lasting until 1945.
March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.
August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.
August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.
February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.
February 22, 1944: Death of Kasturbai
May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.
Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.
May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.
March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.
August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.
August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.
January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.
16பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்
Powerful undersea volcano eruption in Tonga on January 14., 2022
Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud. Early data suggests the volcanic eruption was the biggest since the 1991 blast at Mount Pinatubo in the Philippines, New Zealand-based volcanologist Shane Cronin told Radio New Zealand.
பசிபிக் பெருங்கடல்தொங்கா தீவு அருகில் சீறி எழுந்த சுனாமியால் பாதிக்கபட்ட கிழக்காசிய நாடுகள்
2022 ஜனவரி 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள தொங்கா தீவு அருகில் அதிகாலை 4;26 மணிக்கு ,7.6 ரிக்டர் அளவு பூகம்பம் உண்டாகி, கடல் அடித்தள அசுர எரிமலை பீறிட்டு 12 மைல் [20 கி.மீ. ] உயரத்துக்குப் புகைமண்டலம் எழுந்தது. அத்துடன் பேரளவு ஆற்றல் சுனாமி தூண்டப்பட்டு, கிழக்காசிய நாடுகளின் கடர்கரையில் சுமார் 49 அடி உச்ச உயரத்தில் பேரலைகள் தாக்கியுள்ளன. அந்த சமயத்தில் 6.2 ரிக்டர் பூகம்பம் ஹவாயி தீவை ஆட்டி அசைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பசிபிக் ஆசிய நாடுகள் ஜப்பான், டைவான், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பெரு, ஹவாயி, பிஜி தீவு, தக்க தருணத்தில் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. இயற்கையின் இந்த கோரப் பேரிடர் பேரழிவுகளால் தொங்கா அரசாட்சியைச் [TONGA KINGDOM] சேர்ந்த 169 தீவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார். தொங்கா அரசாங்கப் பரப்பு ஹவாயிக்கு தென்மேற்கு திசையில் சுமார் 5000 கி.மீ.[3100 மைல்] தூரத்தில் உள்ளது.
2014 ஆண்டுக்குப் பிறகு ஹுங்க தொங்கா எரிமலை [HUNGA TONGA VOLCANO] தற்போது 2021 டிசம்பர் 20 இல் வாய் திறந்து உள்ளது. டிசம்பர் 25 இல் வாய் மிகப் பெரிதாகி விஷவாயுப் புகை மண்டலம் 12 மைல் [20 கி.மீ.] உயர்ந்து சுமார் 30 மைல் [50 கி.மீ.] அகலம் பரவி விட்டது. அதைவிடத் திரட்சி ஆகி 2022 ஜனவரி 14 இல் அதன் இடி முழக்கம் 40 மைல் தூரத்தில் [65 கி.மீ.] கேட்டுள்ளது. அந்த இடி நாதம் 520 மைல் [840 கி.மீ.] தூரமுள்ள சமோவாக்கு [Samoa] எட்டி விட்டது. அந்த பயங்கர இடிச் சத்தம் 430 மைல் [700 கி.மீ.] தூரமுள்ள பிஜி தீவு, 1200 மைல் [2000 கி.மீ.] தூரமுள்ள நியூஜிலாந்து, 6000 மைல் [9700 கி.மீ.] தூரமுள்ள அலாஸ்கா வரை சென்றுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில சமயத்தில் 200,000 மின்னல் அடிப்புகள் பதிவாகி உள்ளன. எழும் புகை இருட்டடிப்பு வாயு [ஸல்ஃபர் டையாக்சைடு] 400,000 டன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இது போன்ற அசுர எரிமலைச் சுனாமிகள் 100 கீழ் நேர்ந்துள்ளன என்று அறியப்படுகிறது. 2022 ஜனவரியில் பீறிட்ட ஹுங்க தொங்கா எரிமலை ஆயிரத்தில் ஒன்று என்று கருதப் படுகிறது.
A tsunami measuring 1.5 meters triggered by the shockwave hit Tonga during the weekend, inundating homes and roads and damaging communication lines. However, no death has been reported so far. The shockwave was registered as far away as Alaska and Chennai in a sharp rise and fall of air pressure. The booming sound was reportedly heard as far as New Zealand that lies about 2,500 km from Tonga. More recent reports claimed that most communications lines could be down for up to two weeks. Nevertheless, Tonga also made the news on the crypto front. The tiny island nation in the Tasman Sea of the South Pacific Ocean is accepting bitcoin donations in the aftermath of Saturday’s volcanic shockwave that caused the tsunami.
Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South PacificA grab taken from footage by Japan’s Himawari-8 satellite and released by the National Institute of Information and Communications (Japan) on January 15, 2022 shows the volcanic eruption that provoked a tsunami in Tonga. – The eruption was so intense it was heard as “loud thunder sounds” in Fiji more than 800 kilometres (500 miles) away. (Photo by Handout / NATIONAL INSTITUTE OF INFORMATION AND COMMUNICATIONS (JAPAN) / AFP)
Powerful undersea volcano eruption in Tonga on January 14., 2022
Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud. Early data suggests the volcanic eruption was the biggest since the 1991 blast at Mount Pinatubo in the Philippines, New Zealand-based volcanologist Shane Cronin told Radio New Zealand.
பசிபிக் பெருங்கடல்தொங்கா தீவு அருகில் சீறி எழுந்த சுனாமியால் பாதிக்கபட்ட கிழக்காசிய நாடுகள்
2022 ஜனவரி 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள தொங்கா தீவு அருகில் அதிகாலை 4;26 மணிக்கு ,7.6 ரிக்டர் அளவு பூகம்பம் உண்டாகி, கடல் அடித்தள அசுர எரிமலை பீறிட்டு 12 மைல் [20 கி.மீ. ] உயரத்துக்குப் புகைமண்டலம் எழுந்தது. அத்துடன் பேரளவு ஆற்றல் சுனாமி தூண்டப்பட்டு, கிழக்காசிய நாடுகளின் கடர்கரையில் சுமார் 49 அடி உச்ச உயரத்தில் பேரலைகள் தாக்கியுள்ளன. அந்த சமயத்தில் 6.2 ரிக்டர் பூகம்பம் ஹவாயி தீவை ஆட்டி அசைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பசிபிக் ஆசிய நாடுகள் ஜப்பான், டைவான், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பெரு, ஹவாயி, பிஜி தீவு, தக்க தருணத்தில் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. இயற்கையின் இந்த கோரப் பேரிடர் பேரழிவுகளால் தொங்கா அரசாட்சியைச் [TONGA KINGDOM] சேர்ந்த 169 தீவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார். தொங்கா அரசாங்கப் பரப்பு ஹவாயிக்கு தென்மேற்கு திசையில் சுமார் 5000 கி.மீ.[3100 மைல்] தூரத்தில் உள்ளது.
2014 ஆண்டுக்குப் பிறகு ஹுங்க தொங்கா எரிமலை [HUNGA TONGA VOLCANO] தற்போது 2021 டிசம்பர் 20 இல் வாய் திறந்து உள்ளது. டிசம்பர் 25 இல் வாய் மிகப் பெரிதாகி விஷவாயுப் புகை மண்டலம் 12 மைல் [20 கி.மீ.] உயர்ந்து சுமார் 30 மைல் [50 கி.மீ.] அகலம் பரவி விட்டது. அதைவிடத் திரட்சி ஆகி 2022 ஜனவரி 14 இல் அதன் இடி முழக்கம் 40 மைல் தூரத்தில் [65 கி.மீ.] கேட்டுள்ளது. அந்த இடி நாதம் 520 மைல் [840 கி.மீ.] தூரமுள்ள சமோவாக்கு [Samoa] எட்டி விட்டது. அந்த பயங்கர இடிச் சத்தம் 430 மைல் [700 கி.மீ.] தூரமுள்ள பிஜி தீவு, 1200 மைல் [2000 கி.மீ.] தூரமுள்ள நியூஜிலாந்து, 6000 மைல் [9700 கி.மீ.] தூரமுள்ள அலாஸ்கா வரை சென்றுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில சமயத்தில் 200,000 மின்னல் அடிப்புகள் பதிவாகி உள்ளன. எழும் புகை இருட்டடிப்பு வாயு [ஸல்ஃபர் டையாக்சைடு] 400,000 டன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இது போன்ற அசுர எரிமலைச் சுனாமிகள் 100 கீழ் நேர்ந்துள்ளன என்று அறியப்படுகிறது. 2022 ஜனவரியில் பீறிட்ட ஹுங்க தொங்கா எரிமலை ஆயிரத்தில் ஒன்று என்று கருதப் படுகிறது.https://www.youtube.com/embed/Iz9HvvUGhC4?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparenthttps://www.youtube.com/embed/gdbpITmyh8o?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparent
A tsunami measuring 1.5 meters triggered by the shockwave hit Tonga during the weekend, inundating homes and roads and damaging communication lines. However, no death has been reported so far. The shockwave was registered as far away as Alaska and Chennai in a sharp rise and fall of air pressure. The booming sound was reportedly heard as far as New Zealand that lies about 2,500 km from Tonga. More recent reports claimed that most communications lines could be down for up to two weeks. Nevertheless, Tonga also made the news on the crypto front. The tiny island nation in the Tasman Sea of the South Pacific Ocean is accepting bitcoin donations in the aftermath of Saturday’s volcanic shockwave that caused the tsunami.
Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South PacificA grab taken from footage by Japan’s Himawari-8 satellite and released by the National Institute of Information and Communications (Japan) on January 15, 2022 shows the volcanic eruption that provoked a tsunami in Tonga. – The eruption was so intense it was heard as “loud thunder sounds” in Fiji more than 800 kilometres (500 miles) away. (Photo by Handout / NATIONAL INSTITUTE OF INFORMATION AND COMMUNICATIONS (JAPAN) / AFP)
ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம் [Dark Creator, Dark Force, Dark Energy, Dark Matter] தேவை .
ஆசிரியர்
ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும்.
அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன்.
பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அந்த நூலகத்தின் கோடான கோடி நூல்களை எழுதியது யார் ? எப்படி அது எழுதி வைத்துள்ளது ? ஏன் எழுதி இருக்கிறது ? எப்போது எழுதியவை அந்த நூல்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார் ஐன்ஸ்டைன் ! இருபதாம் நூற்றாண்டின் சவால் அப்பிரபஞ்ச மர்மத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்ற மன உறுதியே.
பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது எத்தனை பெரியது ? பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது ? காலம் எப்போது ஆரம்பித்தது ? காலக் கடிகாரத்தின் வயதென்ன ? சூரியனின் வயதென்ன ? பூமியின் வயதென்ன ? நிலவு எப்போது, எப்படித் தோன்றியது ? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின ? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா ?
சூரியனைச் சுற்றும் அகக்கோள்களான புதன், வெள்ளி, பூமி & நிலவு, செவ்வாய், புறக்கோள்களான பூதக்கோள் வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன், புளுடோ எப்படி உருவாயின ? அக்கோள்கள் ஒவ்வொன்றும் ஏன், எப்படி, எப்போது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தன ? ஈர்ப்பியல் கவர்ச்சி என்பது என்ன ? ஈர்ப்பியல் கவர்ச்சிக்கு எதிரான விலக்கு விசை என்னும் கருஞ்சக்தி எப்படித் தோன்றியது ? நமது சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது ? பேரொளி வீசி வால் நீண்ட வால்மீன்கள் எங்கிருந்து சூரிய மண்டலத்துக்கு வருகின்றன ? அண்டவெளிப் பிண்டம் எப்படி உண்டானது ? முரண்கோள்கள் என்பது என்ன ? ஒளிமந்தை நடுவே உள்ள பூத விழுங்கியான கருந்துளை என்பது என்ன ? காலக்ஸிகள் என்னும் ஒளிமந்தைகள் எவ்வாறு உருவாகி வளர்ந்தன ? பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? பிரபஞ்சம் ஒன்றா, பலவா ? இணைப் பிரபஞ்சங்கள் உள்ளனவா ? சோப்புக் குமிழிபோல் பிரபஞ்சம் தொடர்ந்து விரிகிறதா ? மெதுவாக விரிகிறதா ? அல்லது விரைவாக விரிகிறதா ? அவ்விதம் விரிந்து கொண்டே போய் இறுதியில் முறிந்துவிடுமா ? ஒளிமந்தைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் என்ன நேர்ந்திடும் ?
சூரிய குடும்பத்திலே மிகவும் புதிரான அமைப்பு கொண்ட பூமியில் மட்டும் ஏன் பயிரினங்கள், உயிரினங்கள் தோன்றின; எப்படித் தோன்றின; எப்போது தோன்றின; உலகிலே உன்னத படைப்பான, உயர்ந்த மூளையுடைய மானிடர் பூமியில் மட்டும் தான் தோன்றினாரா ? வேறு அண்டவெளிக் கோள்களிலும் உயிரினங்கள் வசிக்கின்றனவா ? பூமியில் மூன்றில் இருமடங்கு பரப்பை நிரப்பிய பேரளவுக் கடல் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ? உப்புக்கடலாய் எப்படி மாறியது ? மர்மமான பூகாந்தம், பரிதிக் கதிர்களைக் குடைபோல் தடுத்து உயிரினம், பயிரினம் பாதுகாக்கும் வாயுச் சூழ்வெளி எவ்விதம் தோன்றி இன்னும் நீடிக்கிறது ?
சனிக்கோளின் அழகிய நீண்ட வளையங்கள் எப்படித் தோன்றின ? பரிதிபோல் வாயுக்கோளான பூதக்கோள் வியாழன் ஏன் சுய ஒளிவீசும் சூரியனாய் மிளிரவில்லை ? கோடான கோடி விண் பாறைகள், முரண்கோள்கள் ஏன் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன ? வால்மீன்கள் சூரிய மண்டலத் தோற்றத்தின் எச்சங்களா ? பூமியைப் பன்முறைத் தாக்கிய வால்மீன்கள் வழியாக உயிரின மூலவிகள் பூமியில் சேர்ந்தனவா ?
பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து. படைப்பா அல்லது பரிணாமமா ? திட்டமிட்ட படைப்பா ? அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா ?
டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை.. டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும் அவரது பரிணாமம் சிறப்பாக விளக்குகிறது.
பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் திட்டமிட்டுப் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியிருப்பதும் ஓர் ஊகிப்பே ! முதலில் அக்கூற்று ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கம் இல்லை; முடிவு மில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. 500 பேரைச் சுமந்து கொண்டு வானில் பறக்கும் நவீன 707 ஜம்போ ஜெட் விமானம் தானாய் உருவானது என்று கூறினால் யார் இப்போது நம்புவார் ? வெவ்வேறான தோற்றம், பண்புடைய ஆறு பில்லியன் மக்களும், கோடான கோடிப் புள்ளினம், பூவினம், பயிரினம், ஊர்வன, நீர்வள மீனினம் வாழும், சிக்கலான இந்த பூமி, 4.5 பில்லியன் ஆண்டுகளாய்த் தவறாது, மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், ஒரே சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவது தானாகத் தோன்றியது என்று ஒருவர் கூறினால் இப்போது யார் நம்புவார் ? பிரபஞ்சம் ஏன் தோன்றியது, ஆறறிவு படைத்த மனிதர் ஏன் பிறந்தார் என்னும் வினாக்களுக்கு விஞ்ஞானம் பதில் கூற முடிய வில்லை.
பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது.
இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றி யிருக்க வேண்டும் என்று பல்வேறு உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு தோற்றப் பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது என்பது என் னுடைய கருத்து. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்க ரீதியாக விளக்க முடிய வில்லை. எல்லாம் கால வெள்ளத்தில் கருத்து மாறி, திசை மாறி, உருமாறிப் போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாமல் இறுதியாக அந்த முயற்சியைக் கைவிட்டு விடுகிறது. அத்துடன் பிரபஞ்சத் தோற்ற கால இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்க முற்படுகிறது.
காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாக அழிவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
விஞ்ஞானிகள் இதுவரை “உயிர்” என்றால் என்னவென்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ சேர்ந்து, உயிரென்னும் புதிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் “உயிர்” என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர் இணைப்பைக் காட்டுபவை என்பது என் கருத்து.
நமது பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் இயக்கங்கள் யாவும் “தாறுமாறான சீரமைப்பு” [Irregular Order] என்பது என் கருத்து. நமது பால்வெளி ஒளிமந்தை, அதன் கோடான கோடிப் பரிதிக் குழுமங்கள், சூரிய மண்டலக் கோள்களின் அமைப்பு, பண்பாடு, நகர்ச்சி முறை, சுற்றும் பாதை, தட்ப / வெப்ப நிலை, சூழ்வெளித் தோற்றம், காலவெளி மாற்றம் போன்றவை எல்லாம் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை, தாறுமாறானவை, ஆனால் ஓர் சீரமைப்புக்கு உட்பட்டவை. காரண-விளைவு நியதிப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று உருவானதாய், முதல் வடிவைச் சார்ந்ததாய், அதிலிருந்து படிப்படியாய் மேம்பட்டதாய் விருத்தி யாகி வந்துள்ளதாய்த் தெரிகிறது.
இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், கண்ணுக்குத் தெரியாமல், கருவிகளுக்குத் தென்படும் கருந்துளைகள், கருஞ்சக்தி, கருமைப் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய் உருமாறி, அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அழிபவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை.
தற்போதைய நவீனக் கணினி மேற்பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் வாகனம் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி நவீனக் காராய் மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் விருத்தி யாகிச் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலம் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகி, மானிடம் தற்போதைய ஆறறிவு படைத்த உன்னத மனிதராய் உலவி வருகிறது ?
விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவுக்குள் இருக்கும் நுண்ணிய புரோட்டான், எலெக்டிரான், நியூட்ரான் [நேரான், எதிரான், நடுவான்] என்னும் பரமாணுக்களை வெளியேற்றி அவற்றின் அளவைக் கணித்து விட்டார். பரமாணுக்களையும் பிரித்து அவற்றின் அடிப்படைத் துகள்களைக் [ஃபெர்மியான், போசான், (குவார்க்ஸ், லெப்டான்ஸ்)] கண்டுபிடித்து விட்டார். எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றைப் பல்வேறு எண்ணிக்கையில் சேர்த்து, நூற்றுக்கு மேற்பட்ட மூலகங்கள் [Elements], ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள் [Molecules] இயற்கை / செயற்கை மூலம் தயாரிக்கப் பட்டு இப்போது மனிதர் பயன்படுத்த ஏதுவாக உள்ளன. ஒரு புரோட்டான் எப்படி ஹைடிரஜன் வாயு ஆனது ? எட்டுப் புரோட்டானும் எட்டு நியூட்ரானும் சேர்ந்து எப்படி ஆக்ஸிஜன் வாயுவானது ? அவைபோல் எப்படி நைட்ரஜன், வெள்ளி, தங்கம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு, ஈயம், கால்சியம், கார்பன், ஸல்ஃபர், ரேடியம், தோரியம், யுரேனியம் உருவாயின ? வெவ்வேறான வடிவம், பண்பாடுள்ள மூலகம் எல்லாம் தானாய்த் தோன்றினவா ? சீரமைப்பில், அணி வரிசையில் இருக்கும் இவைத் தாறுமாறாய்த் தோற்றம் எடுத்தவையா ? அல்லது திட்டமிட்டுப் படைக்கப் பட்டனவா ?
சமீபத்தில் [2017 நவம்பர்] ஈரான், ஈராக் பகுதியில் நேர்ந்த பூகம்பத்தில் 500 மேற்பட்ட மாந்தர் மரித்தார். இவ்வாறு ஆண்டு தோறும் பற்பல இயற்கை இடர்ப்பாடுகள், சுனாமிகள், பேய்மழைச் சேதாரங்கள், சூறாவளி, ஹர்ரிக்கேன்கள் தாக்குதல் நமது பூமியில் ஏன் ஏற்பட வேண்டும். படைக்கப் பட்ட பூமியோ, தானாகத் தோன்றிய பூமியோ, அது பூரணச் சீரமைப்புக் கோளாகத் தோன்ற வில்லை. பூமிக்குள்ளும் புற்று நோய் பரவியுள்ளது தூரத்தில் பூரண வட்டக் கோளமாகத் தென்படும் பூமி, தோற்ற காலம் முதலே சற்று தாறுமாறாகத்தான் உருவாகியுள்ளது. மனிதர் போன்ற உயிரின வளர்ச்சிக்குப் படைக்கப்பட்ட நமது பூமி ஒரு தாறுமாறன சீரமைப்புக் கோளே.
தேனீக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் ஒன்றாய் உழைத்துக் கூட்டில் தேனைச் சேர்க்கின்றன. தூக்கணாங்குருவி தானாய் கூடு நெய்து முட்டை யிட்டுக் குஞ்சுகள் பொரிக்கின்றது. இலைப் புழுவாய் கிளையில் நெளிந்த புழு முடத்துவ நிலை அடைந்து சில நாட்களில் பறக்கும் பட்டாம் பூச்சியாகக் கண்ணைக் கவர்கிறது. ஜிம்பான்சி மனிதக் குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக மாறினானா ? அல்லது ஒரே பாய்ச்சலில் மாறினானா ? படிப்படி யாக மாறினான் என்றால் கால் மனிதன், அரை மனிதன் இருக்க வேண்டுமே ! குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்று கூறினால், இப்போது ஏன் அந்நிகழ்ச்சி கண்முன் நேருவதில்லை ? ஜிம்பான்சியும், மனிதமும் தனித்தனியாய் ஒரே சமயத்தில் பிறந்து, தமது இனத்தைப் பெருக்கி, விருத்தி செய்து வருகின்றனவே !
உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு விதமான முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி: இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கை நிகழ்ச்சிகள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது, ஆனால் எச்சரிக்கை செய்யும் ! ஒரு சில பௌதிக, இரசாயன வினைகளை மனிதன் செய்து காட்டியுள்ளான். அணுவைப் பிளந்து பேரளவு சக்தியை வெளியாக்கியது, சூரியனின் அணுப்பிணைவு சக்தியை உண்டாக்கி ஹைடிரஜன் குண்டை வெடித்தது, அணுக்கருச் செயற்கை முறையில் மூலங்கள் [புதியவை, பழையவை] உண்டாக்கியது, இவற்றுக்குச் சான்றுகள்.
விண்வெளி விஞ்ஞானம் அனுதினம் விருத்தியாகும் மகத்தான 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். விண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே நாம் புதிய அற்புத விளைவு களைக் காண்கிறோம். வெண்ணிலவில் தடம் வைத்து மீண்ட மனிதரின் மாபெரும் விந்தைகளைக் கண்டோம் ! அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த் தளத்திலேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா ?
பூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது ! 5000 ஆண்டுகளுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைன கலாச்சாரங்களை அறிய முடிந்தது. பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள் முயன்று எழுதி வந்திருக்கிறார்கள். சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரை குறையாக விடுவிக்கப் பட்டும், படாமல்தான் நம்கண் முன் தொங்கிக் கொண்டிருக் கின்றன !
பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள் (Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன ? காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts), ஈர்ப்பியல் அலைகள் (Gravitational Waves) என்றால் என்ன? செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது ? அகிலக் கதிர்கள் (Cosmic Rays) எங்கிருந்து வருகின்றன ? பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா? ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்குவது எது? இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது.
இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்கா மலும் போகலாம். வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம். புதிய கருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது.
NASA’s James Webb Space Telescope – https://www.flickr.com/photos/nasawebbtelescope/51774831484/ Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, January 8th, 2022, from the ELA-3 Launch Zone of Europe’s Spaceport at the Guiana Space Centre in Kourou, French Guiana. The James Webb Space Telescope (sometimes called JWST or Webb) is a large infrared telescope with a 21.3 foot (6.5 meter) primary mirror. The observatory will study every phase of cosmic history—from within our solar system to the most distant observable galaxies in the early universe. Photo credit: NASAThe James Webb Space Telescope is a space telescope developed by NASA with contributions from the European Space Agency, and the Canadian Space Agency. The telescope is named after James E. Webb, who was the administrator of NASA from 1961 to 1968 and played an integral role in the Apollo program. Wikipedia
Comparison of Webb with Hubble Primary Mirrors
முப்பெரும் விண்வெளி நிறுவங்கள் ஒப்பற்ற ஒரு பெரும் விண்வெளி ஆய்வுத் தொலைநோக்கியை ஏவி உள்ளன.
2022 ஜனவரி 8 ஆம் தேதி காலை 7:20 மணிக்கு, நாசா, ஈசா, சீசா [ NASA, ESA, CSA] [NATIONAL AERONAUTICAL & SPACE ADMINISTRATION, EUROPEAN SPACE AGENCY, CANADIAN SPACE AGENCY] ஜேம்ஸ் வெப் எனப் பெயர் பெறும் பெரும் தொலைநோக்கியை, [James Webb Telescope] ஈசா ஏவுதளம் பிரென்ச் கயானாவி லிருந்து ஏரியான்-5 ராக்கெட்டில் ஏந்தி, பூமியைச் சுற்றி ஆய்வு செய்ய வெற்றி கரமாக அனுப்பி உள்ளது. இப்போது இயங்கி வரும் ஹப்பிள் தொலைநோக்கி துவங்கிய அண்டவெளித் தேடலை, வெகு தூர ஒளிமந்தைகள் [GALAXIES] ஆய்வை, தூரத்து உலகங்கள் அமைப்பை, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி தொடரும். அப்பெரும் பணிகளை உலக முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் ஒன்று கூடி, பூர்வீகப் பேபி பிரபஞ்சம், முதல் ஒளிமந்தை, நமது சூரிய மண்டலம், அண்டைச் சூரிய மண்டலக் கோள்கள் ஆகிய வற்றின் தோற்றங்களை ஆய்வு செய்ய தங்க முலாம் பூசிய 21 அடி முதன்மைக் கண்ணாடி உள்ளது..
ஏவிய 27 நிமிடத்தில் விண்வெளி நோக்கச் சிமிழ் ஏரியன்-5 ராக்கெட்டிலிருந்து பிரிந்து, பூமியிலிருந்து சுமார் 870 மைல் [1400 கி.மீ.] உயரத்தில் பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. அடுத்த மூன்று நிமிடத்தில், வெப் தொலைநோக்கியின் சூரியத் தட்டுகள், விரிந்து விண்சிமிழ் சூரிய சக்தியில் இயங்கியது.
ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி இப்போது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தூரத்தில், பூமியோடு சேர்ந்து, ஒரு நேர் கோட்டில் சூரியனைச் சுற்றி வருகிறது.
On Thursday, November 17, 2011, the House and Congress came to an agreement for the fiscal year 2012 budget that includes funding for NASA and approves the full requested funding for the James Webb Space Telescope (JWST), the successor to the magnificent Hubble Space Telescope. The Webb, which came under fire in July 2011 when the House proposed cutting its funding entirely, will receive $529.6 million, the amount required for it to stay on track for its planned 2018 launch.
Here are five cool things – which you might not know – about the JWST project.
1. The James Webb will unfold in space. It’s being launched on an Ariane 5 rocket, provided by the European Space Agency (ESA). But because of its massive size — it’s as big as a tennis court and about 40 feet (12 meters) high — it must be folded up for the trip. Many features of the telescope, such as the hexagonal shape of the mirrors, were designed to enable the unfolding process. Check out the video below for a glimpse of how Webb’s unfolding will take place.
2. The Webb will be nearly 1 million miles from Earth. To be exact, it’ll be 940,000 miles (about 1.5 million kilometers) from Earth.
Webb will orbit at the Second Lagrangian Point. Credit: NASA
It’s being sent to what’s known as the L2 – the second Lagrangian point in the Earth/sun system. The Lagrangian points are named for Joseph Louis Lagrange, who realized that there would be stable or semi-stable points in the vicinity of every two orbiting bodies in space. In other words, every time you have two orbiting bodies, you also get five Lagrangian points. At these points, a third body can maintain a relatively stable orbit without the heavy usage of thrusters and propellants. In this case, the sun and Earth are the two bodies in space. The Webb Telescope will orbit the L2 point in the Earth/sun system, which means it will follow Earth around the sun, always in a straight line with the Earth and sun. Its orbit will be far from Earth – beyond the moon’s orbit. For comparison, the Hubble Space Telescope is 380 miles away in low Earth orbit.
3. The Webb Telescope’s 18 mirrors are coated in a thin layer of 24-karat gold. Webb’s purpose is to read infrared light, the wavelength of light that is emitted by the farthest objects in the universe. Gold reflects red light better than other materials, making the mirror 98 percent reflective, rather than the 85 percent achieved by ordinary mirrors.
Webb
4. The Webb Telescope’s science instruments will operate at temperatures near absolute zero, the theoretical temperature at which all molecular and atomic motion ceases.
Webb
Everything that exists emits infrared radiation, which is produced from the vibration of atoms. The colder something is, the less infrared it emits. Because Webb is designed to work in the infrared, but emits infrared itself, it must be kept as cold as possible to keep its interference with itself at a minimum. Webb’s massive sunshield divides the telescope into a hot side, with temperatures around 185 degrees F, and a cold side, around -388 degrees F, or 40 Kelvin. In contrast, the coldest temperature ever recorded on Earth was -129 degrees F.
5. Planning for the Webb telescope began in 1995. Just five years after Hubble launched, scientists at the Space Telescope Science Institute (STScI) in Baltimore, Md., first envisioned what its successor would look like, knowing it would take many years to bring this vision to fruition. Now the Webb is scheduled to be launched in 2018, and it’s a safe bet that astronomers soon will begin imagining an instrument to extend our vision with a telescope even grander and more powerful than the Webb.
மொராக்கோ நாட்டில் மிகப்பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையம்
முதன்முதல் மொராக்கோ நாட்டில் மிகப்பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையம் அமைக்க உலக வங்கி 519 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் என்று 2014 அக்டோபர் 3 ஆம் தேதி உறுதி கூறியது. ஆப்பிரிக்க நாடுகளிலே மொராக்கோ போல் சூரிய ஒளி கிடைக்கும் நாடு வேறொன்றில்லை. வருடம் ஒன்றில் சுமார் 3600 மணிநேரம் மொராக்கோ பாலை வனத்தில் சூரிய ஒளி பெற முடிகிறது. ஸஹாரா பாலை வனத்தின் சராசரி சூரிய ஒளி ஆண்டுக்கு 3117 மணிகள். உச்ச உஷ்ணம் ஸஹாராவில் 77 டிகிரி C [170 டிகிரி F ]. மொராக்கோ 9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, உலகிலே மிகப் பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையத்தைக் கட்டுமானம் செய்யத் திட்ட மிட்டது. மொராக்கோவின் குறிக்கோள் 2020 ஆண்டுக்குள் 5 சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் [Photovoltaic, Concentrated Solar Power, Solar Steam turbine types ] கட்டி முடிக்க வேண்டும் என்பதே. அவ்விதம் முடியும் போது சூரியக் கதிர் மின்சக்தியின் பயன்பாடு 38% சதவீதம் இருக்கும்.
மொராக்கோ நாடு ஒன்றுதான் [1400 MW or 2100 MW Capacity Under Sea Cable Link ] ஐரோப்பாவுடன் [ஸ்பெயின்] 9 மைல் (15 km) நீண்ட கடலடி மின்வடத் தொடர்பு வைத்துள்ளது. முதல் சூரியக்கதிர் நிலையம் 2015 இல் இயங்கத் துவங்கியது. 2017 இல் 5750 GWh மின்னாற்றல் ஸ்பெயின் மொராக்கோவுக்கு அனுப்பியது. இப்போது மொராக்கோ ஸ்பெயினுக்கு சூரியக்கதிர் மின்சக்தி அனுப்பும் காலம் வந்துவிட்டது.
திட்டமிட்ட ஐந்து சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்களுள் முதலாக ஒன்று 500 MW யூனிட் மொராக்கோ தென் பகுதியில் உள்ள ஓரட்ஸாசாட் [Ouratzazate] நகரில் கட்டப்பட உள்ளது. 2013 மே மாதம் 10 இல் கட்டுமானம் ஆரம்பமானது. திட்டம் முக்கட்டப் போக்கில் [160 MW சூரியக்கதிர் குவிப்பு நிலையம், 200 MW விரிவு வட்ட நிலையம் & 150 MW சூரிய அடுப்பு நிலையம்] நிறுவகம் ஆனது. [Noor 1 (160 MW Concentrated Solar Power Plant), Noor 2 (200 MW Parabolic Mirror Plant), Noor 3 (150 MW Solar Trough Plant ]. புது நிலையங்களில் பயன்படும் விரி வளைவுச் சூரிய எதிர் ஒளிக் கண்ணாடித் தட்டுகள் [Solar Parabolic Mirrors] 12 மீடர் [39 அடி] உயரம் உள்ளவை. சூரிய வெப்பத்தை குவித்து உறிஞ்சும் திரவக் குழல்கள் 390 டிகிரி செல்சியஸ் [740 டிகிரி பாரன்ஹீட் ] அளவீட்டில் ஓடுபவை. அந்த நிலையங்கள் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மின்சக்தி அனுப்புபவை. நூர் 1 [Noor 1] சூரியக்கதிர் நிலையத்தில் 500,000 வளைவுக் கண்ணாடிகள் [Parabolic Mirrors] 800 அணி வகுப்பில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மாடல் நிலையம் அமெரிக்கா காலிஃபோர்னியா – நெவேடா, எல்லைப் பக்கம் மொஹாவி பாலை வனத்திலும் உள்ளது. 2.2 பில்லியன் செலவில் 400 MW திறனில் உருவாகும் “இவான்பா” [IVANPAH ] சூரியக்கதிர் மின்சார நிலையம் 5 சதுர மைல் பரப்பில், நாற்பது மூவடுக்குக் கோபுரத்தில் ஆயிரக் கணக்கான சூரியக் கண்ணாடிகளால் இயங்கி வருகிறது. இவான்பா சூரியக் கதிர் நிலயம்140,000 இல்லங்களுக்கு மின்சக்தி பரிமாறும் திறம் உடையது.
2021 காப்பு-26 [COP-26] பேரரங்கம் செய்த தீர்மானங்கள்
வரம்பு குறிக்கோள் உஷ்ணம் 1.5 C என்பது மாறவில்லை.
ஆண்டுக்கு 1.4 பில்லியன் டன் கரிவாயுக் குறைப்பு நல்ல முயற்சி.
சைனா உலகப் பூகோளக் கரி வெளியேற்றத்தில் 30% பங்கு பொறுப்பு
மற்ற நாடுகள் 70% அளவுக்குப் பொறுப்பு.
சைனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன. [2021] காப்பு-26 பேரரங்கில் ரஷ்யா, சைனா கலந்து கொள்ளவில்லை.
சைனா பேரளவு சூரிய, காற்றாடி எரிசக்தி மீள்புதிப்பு சாதனங்கள், எலெக்டிரிக் வாகனங்கள், பஸ்கள் பயன்படுத்தி வருகிறது.
இந்தியப் பிரதமர் மோடி 2070 ஆண்டில்தான் பூஜிய விஷவாயுச் சூழ்வெளி இந்தியாவில் கொண்டுவர இயலும் என்று அறிவித்தார்.
ரஷ்ய & சைனப் பிரதிநிதிகள் 2060 ஆண்டுக்குள் பூஜிய விஷ வாயுக் கடைப்பிடிப்பு என அறிவித்தார்.
ஓர் ஆண்டுக்கு 1.4 பில்ல்லியன் டன் கரிவாயு வெளிவீச்சு குறைப்புத் திட்டம் பூஜிய விஷ வாயுச் சூழ்வெளியை 2050 இல் நிறைவேற்றும்.
இப்போதுள்ள நிலமை நீடிப்பு, மேலும் வெளிவீச்சுகளைக் குறைக்காமை இன்னும் 11 ஆண்டுகளில் வரம்பு உஷ்ணம் 1.5 டிகிரி செல்சியசுக்கு எட்டிவிடும். இது 50% அனுமான அறிவிப்பு.
இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி
India Has Successfully Tested Its First 3,000-Mile Ballistic Missile
இந்தியாவின் தூர நீட்சி கட்டளை வெடிகணை முதற் சோதனை வெற்றி
2021 அக்டோபர் 28 இல் இந்தியா முதன்முதல் செய்த 3000 மைல் தூர நீட்சி அக்கினி -5 வெடிகணைச் சோதனை வெற்றி, ஆசியாவில் இந்தியா சைனா போன்றநாட்டின் எந்த நகரையும் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியது ஆனால் இந்தியா முதன்முதல் அக்கினி-5 வெடிகணையைபகை நாட்டின் [NO FIRST USE] மீது ஏவாது. மேஜர் கௌரவ் ஆரியா, அக்கினி-5 மிக்க ஆற்றல் கொண்ட வெடி ஆயுதம். அணு குண்டையும் ஏந்திச் செல்லும் தகுதி உடையது. தணிந்த ஆற்றல் [620-1242 miles] [1000-2000 km] கொண்ட வெடி கணை அக்கினி-பிரைம் [AGNI-PRIME] சோதனை செய்யப் பட்டது. சைனா 2021 ஆகஸ்டு மாதம் தனது ஹைபர்சானிக் ஆயுதத்தைச் [HYPERSONIC MISSILE] சோதனை செய்து பூமியை ஒருமுறை சுற்றி, குறிக்கோளை 24 மைல் தூரத் துல்லிமத்தில் தாக்கியது.
India successfully test-launched on October 28, 2021 its first ballistic missile, the Agni-5, at roughly 10:20 AM EDT, using a three-stage solid-fueled engine that can fire nuclear payloads up to 3,000 miles with an extremely high level of accuracy, according to an initial report from Republic World, an India-based news service.
On the world stage, this weapon isn’t new, but it represents a major advancement for India, and fundamentally alters the balance of power in the region amid mounting tensions between major worldwide powers.
The test of Agni-5 is part of India’s central defense policy to have “credible minimum deterrence” to maintain its commitment to “No First Use”, according to the report. The country’s first long-range intercontinental ballistic missile was developed by the Defense Research and Development Organization (DRDO), and can target any location in China, and even reach as far as Europe. Major Gaurav Arya of India’s military forces said Agni-5 can actively deter China’s strategic plans. “This missile has nothing to do with Pakistan, it does not even consider Pakistan as a possible landing target,” he said. “This is an aim at China, which is very important.”
Arya also said that once Agni-5 is inducted for real-world service, it will serve as a powerful symbolic piece on the board against China’s government, according to the report. “We can hit you whenever we want, wherever we want inside Mainland China,” he said. This comes on the heels of another recent success of the DRDO’s Indigenous Technology Cruise Missile (ITCM), fired off the Odisha coast. Earlier, in July, India also test-fired its New Generation Akash Missile (Akash-NG), which is a surface-to-air missile system that can reach 37 miles (60 km). Other recently developed weapons from the DRDO include the Man-Portable Anti Tank Guided Missile, and another new missile of the Agni series called the Agni-Prime, with a range of 621 to 1,242 miles (1,000 to 2,000 km).
Ballistic missiles are far easier to shoot down than hypersonic weapons
This comes amid rising tensions between the U.S. and China, the former of which has good relations with India. But while India’s expanding ballistic missile capabilities add to the hypothetical chessboard should conflict happen, it’s still one step behind its northern rival. Earlier this month, it was revealed that China had tested a hypersonic missile in August that launched atop a Long March rocket, and then circled the Earth in low orbit before descending to its final target, which it only missed by 24 miles. For reference, the Earth is 7,917.5 miles in diameter, which means, as far as public knowledge goes, China is an entire step ahead of India’s ally, the United States, in the most advanced missile technology.
Last week, the Pentagon confirmed that a test launch of a hypersonic missile had failed, implying that the United States’ hypersonic weapons technologies have yet to reach the level of maturity of its China-built counterparts. While the U.S. has famously closed the technological gap with rival countries at blinding speeds, and India’s newest ballistic missile is another strategic asset in the defense against possible conflict with China, India’s ballistic technology could be vulnerable to strategic air defense capabilities of its northern neighbor, since ballistic missiles’ parabolic trajectory makes them a far easier target than hypersonic weapons
இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி
“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை! வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”
டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி
இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை
டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun]. அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார். பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார். இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம். அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது! 1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார். உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.
1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார். அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார். பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.
1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார். அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன. முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence]. அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force]. இரண்டுக்கும் விண்ணப் பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது. முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை. அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.
தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது! தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை! கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார். அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.
டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டிஃபிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது. அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிராஃப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார். அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிராஃப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார். அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார். சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார். பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்.. SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார். 1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது. அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.
ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார். அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர். வீணை வாசிக்கிறார். ஸ்ரீராகத்தை ரசிக்கிறார். தமிழில் கவிதை புனைகிறார். தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர். அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.
இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்
1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.
டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்
1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defense Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணு வத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.
2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறி நுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.
3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லா வற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்த டிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.
4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)
5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப் படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..
பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா
இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.
தகவல்:
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007] 2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad 3. Indian Space Program By: Subhajit Ghosh 4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007] 5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007] 6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm] 7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science] 8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer] 9. Indian Space Program By: Wikipedia 10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html] 11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717] 12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp 13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html 14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive] 15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007] 16 Missile Test By India [February 5, 2007] 17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006] 18 Defense Update, New Pissile Program at Aero India (2007) 19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense 20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/] 22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People. 23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html] 24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University. 25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html] 26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/] 27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems. 28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
அணுமின்சக்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது மூன்றில் ஒரு பங்கு வெப்பசக்தியே [சுமார் 35% இயக்கத் திறன்] [EFFICIENCY]. குளிர்கலனில் TURBINE CONDENSER] 65% வெப்பசக்தி பயன் தராமல் கடல் தணிப்பு நீரிலோ , கோபுரத்திலோ [CONDENSER COOLING WATER] வீணாகிறது. இந்த 65% வெப்பசக்தி மீட்கப்பட்டு பல தொழிற்துறை ஆலைகளுக்குப் பயன்படுகிறது. முக்கிய கடல் சார்ந்த பகுதிகளில் உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்க முடிகிறது மேலும் எரிசக்தி நீரக வாயு [HYDROGEN GAS], மீதேன் [METHANE GAS] தயாரிக்கவும், குளிர் நாடுகளில் வீடுகளுக்குச் சூடு அளிக்கவும், தொழிதுறை ஆலைகளுக்கு நீராவி அனுப்பவும் உதவுகிறது. ஜப்பானில்இயங்கி வரும் உச்ச உஷ்ண அணு உலை [HTTR] [HIGH TEMPERATURE TEST REACTOR] மின்சாரம் தயாரிப்ப தோடு, பயன்படா சக்தி மீட்கப்பட்டு நீரக வாயு, மீதேன் வாயு தயாரிக்கப் படுகிறது. இம்முறைக்கு கூட்டுப்பிறப்பு [cogeneration] முறை என்று பெயர்.கூட்டுப்பிறப்பு முறையின் இயக்கத் திறன் 80%
தற்போது 10% உலகத் தேவைக்கு அணுசக்தி நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன குளிர் நாடுகளான ரஷ்யா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு,சுலோவேகியா,சுவிட்சர் லாந்து,யுக்ரேன் வீடுகளைச் சூடாக வைத்திருக்க அணுமின்சக்தி நீராவி பயன்படுகிறது.
Non-electric applications of nuclear energy are reviewed, including technological, environmental and economic issues of such applications as well as future prospects and benefits of non-electric applications of nuclear energy. The applications for nuclear energy are significantly greater than electricity generation, including cogeneration, district heating and cooling, high-temperature process heating, hydrogen and alternative fuel production, transportation and desalination. These applications of nuclear energy expand its prospects and enhance its benefits, such as reduced environmental impact and climate change mitigation. Interest in non-electric applications of nuclear energy is growing, driven by environmental, economic, security and other reasons. The potential uses of nuclear energy beyond electricity generation and supply are likely to find increasing application in the future.
The IAEA has developed software tools, such as the Hydrogen Economic Evaluation Program (HEEP) and Hydrogen Calculator, to assess options for hydrogen production. Links to download both tools are available here.
To assess nuclear desalination, the IAEA has developed the Desalination Economic Evaluation Program (DEEP) and the DEsalination Thermodynamic Optimization Programme (DE-TOP) to perform economic, thermodynamic and optimization analyses of different power resources coupled to various desalination processes. The software are available for download here.
The IAEA has been coordinating feasibility studies on nuclear desalination since 1989. The IAEA Technical Working Group on Nuclear Desalination is a global network of experts that supports programme assessment and planning, research, development, design, construction, economics, safety aspects, international collaboration for demonstration projects, and operation and maintenance of nuclear desalination plants.
அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள்
2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய் கோகலேயும் அமெரிக்க அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது. பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ? அணு உலை இயக்கும் இந்தியாவா ? அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா ? [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.] இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது. 2019 ஆண்டு அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.
2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது. “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம். இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்] முனைந்துள்ளது. அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன. நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும். ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.
What’s abundantly clear is that the United States of America is the all-time biggest, baddest greenhouse gas emitter on the planet.
உலகிலே மிகப்பெரும் சூழ்வெளி விஷ வாயு வெளிவீச்சு வல்லமை நாடு
அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா அசுர வல்லமை நாடு. கியோடோ, கோபன்ஹேகன், பாரிஸ் போன்ற உலகச் சூழ்வெளி விஷ வாயுக்கள் குறைப்பு ஒப்பந்தங்களில் உடன்படாத ஒரு பெரும் வல்லரசு நாடு அமெரிக்காதான். 2021 ஆண்டு கரிவாயு வீச்சு அளவை ஒப்பிடும்போது உலகச் செல்வீக நாடுகளில் 20 இல் கரிவாயுக் கொள்ளளவு விரைவாக மிகுந்துள்ளது என்று “காலநிலைத் தெளிவு அறிக்கை” தயாரிப்பாளர் [Climate Transparency Report] கூறுகிறார். இன்னும் இரண்டு வாரத்தில் கிளாஸ்கோ, ஸ்காட்லாந்தில் COP26 காலநிலைக் கூட்டிணைப்பு உலகப் பேரவை கூடிப் பேசப் போகிறது. .
மேலும் தெளிவு அறிக்கை கூறுவது.
G20 குழுமை நாடுகளால் இந்த 2021 ஆண்டில் கரிவாயு அளவு 4% ஏறுகிறது.;
2020 கொரோனா பேரிடரால் G20 குழுமை நாடுகளில் கரிவாயு சேர்க்கை 6% குறைந்தது.
சைனா, இந்தியா, அர்ஜென்டைனா நாடுகளில் கரிவாயு வீச்சு 2019 ஆண்டை விட மிகையானது.
இயற்கை வாயு, பெட்ரோலியம் எரிசக்தி தொடர்ப் பயன்பாடு சூழ்வெளி உஷ்ணக் கட்டுப்பாடை தடுத்தது.
கடல்நீர் உஷ்ணம் தற்போது 1.1C ஆக உள்ளது. அது 1.5.C ஆக ஏறி விடாமல் தடுப்பு முறைகள் கையாள்வது.
. G20 குழு நாடுகள்75% சுழ்வெளி விஷ வாயுக்கள் எழுச்சிக்குப் பங்கு ஏற்புக்கு துணை செய்கின்றன.
G20 குழு நாடுகளில்நிலக்கரிப் பயன்பாடுகளால் கரிவாயு எழுச்சி இந்த ஆண்டு 5%
சைனா நிலக்கரி எரிசக்தி பயன்படுத்தி கரிவாயு எழுச்சி 60% உலகில் இவ்வாண்டு மிகையாகி விட்டது.
அமெரிக்கா, இந்தியாவில் இவ்வாண்டு நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இவ்வாண்டில் [2021] நிலக்கரி விலை 200% மிகையாகி மின்வெட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
G20 குழு நாடுகளில் எரிவாயு பயன்பாடு 12% [2015-2020] ஆண்டுகளில்.
That’s true, despite recent gains in energy efficiency and cuts in emissions. These relatively small steps now cannot offset more than a century of reckless emissions that have built up in the atmosphere. Much more drastic steps are now needed to slow climate change. And as the top cumulative emitter, the US bears a greater imperative for curbing its carbon dioxide output and a greater moral responsibility for the impacts of global warming.
Yet the US is now the only country aiming to withdraw from the Paris climate agreement. China now emits more than the US, and India’s emissions are rapidly rising. But these countries have a much smaller share of cumulative global emissions. Their populations are also much bigger than the US and other wealthier countries, so the amount that India and China emit per person is vastly smaller than the United States or the United Kingdom.
Global CO2 Emissions by Country 2008 The global emissions of CO2 for time 1900-2008 from fossil fuels and industrial processes are shown in Figure 2.
Carbon dioxide (CO2): Fossil fuel use is the primary source of CO2. CO2 can also be emitted from direct human-induced impacts on forestry and other land use, such as throughdeforestation, land clearing for agriculture, and degradation of soils. Likewise, land can also remove CO2 from the atmosphere through reforestation, improvement of soils, and other activities.
Methane (CH4): Agricultural activities, waste management, energy use, and biomass burning all contribute to CH4 emissions.
Nitrous oxide (N2O): Agricultural activities, such as fertilizer use, are the primary source of N2O emissions. Fossil fuel combustion also generates N2O.
Fluorinated gases (F-gases): Industrial processes, refrigeration, and the use of a variety of consumer products contribute to emissions of F-gases, which include hydrofluorocarbons (HFCs), perfluorocarbons (PFCs), and sulfur hexafluoride (SF6).
Black carbon is a solid particle or aerosol, not a gas, but it also contributes to warming of the atmosphere. Learn more about black carbon and climate change on our Causes of Climate Change page.
Flooding has taken place in many parts of USA, UK, Germany & China across 2021
Report highlights
Coal consumption is projected to rise by almost 5% in 2021, with this growth driven by China(accounting for 61% of the growth), the USA (18%) and India (17%)
The US (4.9 tCO2/capita) and Australia (4.1 tCO2/capita) have the highest building emissions per capita in the G20 (average is 1.4 tCO2/capita), reflecting the high share of fossil fuels, especially natural gas and oil, used for heat generation
Between 1999 and 2018 there have been nearly 500,000 fatalities and close to $3.5 trillion of economic costs due to climate impacts worldwide, with China, India, Japan, Germany, and the US being hit particularly hard in 2018
Across the G20, the current average market share of electric vehicles (EVs) in new car sales remains low at 3.2% (excluding the EU), with Germany, France, and the UK having the highest shares of EVs
There are expectations that both India and China will submit new national plans before the meeting in Glasgow, which could give a significant boost to attempts to keep the 1.5C target in view.
The G20 group will meet in Rome in the days leading up to COP26 and the UK minister whowill lead the talks has in recent days urged the leaders of these countries to now step up.
“It is leaders who made a promise to the world in Paris six years ago, and it is leaders that must honour it,” said Alok Sharma.
“Responsibility rests with each and every country, and we must all play our part. Because on climate, the world will succeed, or fail, as one.”
October 16th, 2021 [நீரகவாயு பயன்பாடு]
Ignore the hydrogen market at your own peril.
Haven’t heard of the hydrogen economy and all the new technologies being developed around it?
That’s okay, you’re not alone.
And it isn’t too late. In fact, now is the perfect time to gain exposure.
But first, what exactly is “the hydrogen economy”?
Simply put, the hydrogen economy is a collection of markets and technologies that surround the fast-growing hydrogen market.
Between liquid hydrogen and hydrogen fuel cell airplanes and cars, hydrogen is quickly becoming the hottest source of clean energy investing.
This is the optimal time for investors to make the most of their money.
Because the various technologies are real and decisions are still being made, investors in the know have a chance to make gains of a lifetime.
While lithium-ion batteries have been leading the way in clean energy technology advancements, hydrogen is about to take the spotlight.
We’ve been following the developments in hydrogen and the various technologies surrounding it for years, all the while taking notes and researching.
Our latest (free) report contains that research and some investment ideas for those looking to take advantage of this quickly growing economy.
It’s called “The Hydrogen Economy 2.0,” and in it, we detail:
Various industries impacted by hydrogen tech
What is causing recent breakthroughs for the technology
Why hydrogen technology has infinite room to grow
After reading our free report, you’ll know why we’re excited about the huge potential of hydrogen technology not only for investors, but for the world as a whole.
This is not an opportunity you want to delay taking action on.
Aviation: Germany Opens World’s First Plant for Clean Jet Fuel on October 4, 2021
S. Jayabarathan B.E. (Hons), P. Eng (Nuclear) Canada
German non-profit organization Atmosfair unveiled on Monday, Oct. 4, 2021 the world’s first commercial plant for producing synthetic kerosene, an environmentally friendly alternative fuel.
According to an ABC News report on the plant unveiling, the aviation industry currently accounts for approximately 2.5 percent of worldwide CO2 emissions, and it is struggling to keep up the pace with other industries that are turning to electrification.
2050 ஆண்டுக்குள் ஜெர்மனி பூஜிய கரிவாயு வெளியேற்றத் திட்டம்
அகில நாட்டு விமானப் பயணக் குழுவகம் [ International Air Transport Association] (IATA) 2021 அக்டோபர் 4 இல் அறிவித்த “2050 ஆண்டுக்குள் பூஜிய கரிவாயு குறிக்கோள்” தகவல் லாபமில்லா அட்மாஸ்ஃபர் தொழிற்துறை [Nonprofit Organization Atmosfair] தனது உலக முதற்பாடு செயற்கைக் கரி நடுமை ஈ-கெரோசின் ஜெட் எஞ்சின் எரித் திரவ ஆலையைத் [Synthetic Carbon-neutral eKerosene Aviation Fuel Plant] திறந்தது. குழுவகம் ஜெர்மனி எம்ஸ்லாந்து [Emsland ] நிலப் பகுதியைத் தேர்வு செய்து 2022 ஆண்டில் எட்டுக் பாரல்கள் [Eight Barrels] ஒரு டன் செயற்கை ஈ-கெரோசின் எரித் திரவம் தயாரிக்கும் என்று அறிவித்தது. விமானப் போக்குவரத்துப் பயணம் பூகோளக் கரிவாயு வெளியேற்றத்தில் 2%-3% பங்களவு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். தற்போதுள்ள ஏவியேசன் எரித்திரவத்தில் ஈ-கிரேசினைக் கலந்தால். பேரளவு கரிவாயு வெளிவீச்சைக் குறைக்கும். அதற்கு மீள்புதிப்பு மின்சக்தி பரிமாற காற்றாடி சுழலிகள் [ Electricity from Reusable Wind Turbine] தேவைப்படும். அவ்விதம் தயாராகும் கலப்பு எரித் திரவம், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா விமானங்களில் நிரப்பப்படும்.
ஜெர்மனியின் விமானங்களுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் டன் ஈ-கெரோசின் எரித் திரவம் தேவைப்படும். காலநிலைப் பாதுகாப்புக்கு பச்சை நீரக வாயு [Green Hydrogen] பயன்படுகிறது. பச்சை நீரக வாயு தயாரிக்க பேரளவு மீள்புதிப்பு மின்சக்தி [காற்றாடிச் சுழலிகள்] மின்சாரம் கிடைக்க வேண்டும். செயற்கை ஈ-கெரோசின், ஏவியேசன் எரித்திரம் போல் 4 முதல் 5 மடங்கு விலை மிக்கது. பேரளவு ஆலைகள் தயாரித்தால் விலை குறையலாம். அத்துடன் ஏராளமான காற்றாடிச் சுழலிகள் மின்சாரம் அருகில் கிடைக்க வேண்டும்.