சி. ஜெயபாரதன், கனடா
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டி களுக்கு !
கையில் இருப்பதைக் கவனமாய்
மெய்யில் வைத்துகொள் !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரணச் சுதந்திரம்
புவியில் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரணச் சுதந்திரம்
ஒரு குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரணச் சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம் !
பூரணச் சுதந்திரத்தில்
மதம்பிடித்த யானைகள்
மாநிலத்தைச் சூறையாடும் !
விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விதிகளுக்கு அடங்கிய
சுதந்திரம் !
உரிமை யில்லாத
சுதந்திரம் !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா
சுதந்திரம் ?
எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராகத் தோன்றும்
பூரணச் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலைக்குப்
போராடுகிறார்
போலிச் சாமியார் !
+++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 15, 2011 (R-7)

Important
This Nice Kavithai,
பாராட்டுக்கு நன்றி நண்பரே.
நட்புடன்,
சி. ஜெயபாரதன்
ample post you’ve get hold of
This weblog appears to get a great deal of visitors. How do you advertise it? It gives a nice unique spin on things. I guess having something real or substantial to post about is the most important factor.
Excellent! Your post has a bunch comment posts. How did you get so many people to view your site I’m jealous! I’m still learning all about blogs on the net. I’m going to look around on your blog to get a better idea how to achieve success. Thank you!