நமது புனித பூமி

சி. ஜெயபாரதன், கனடா

இந்த பூமி நமது
இந்த வானம் நமது
இந்த நீர்வளம்  நமது
முப்பெரும் சூழ்வளங்கள்
தூயதாய் வைப்பது நமக்கு
ஓயாத கடமை.

கல்தோன்றி மண் வளமாகிப்
புல்தோன்றிப் பூ மலர
புழுக்கள் நெளிய நீர்வளம்
எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன்
தானாக நீர் வெள்ளம்
மீன்வளம் பெருக்கிய தெப்படி ?
மீனினம் மானுடம்
ஆனதெப்படி ?
வெப்பத்தில் அழுத்த வாயுக்கள்
வெடித் தெரிந்து
நீர்த் திரவம் சேர்ந்ததா ?
சூரியக் கதிரொளி மின்னலில்
வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம்
வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை
தண்ணீர் ஆனதா ?
சுவைநீர் உப்புநீர் ஆன தெப்படி ?
கடல்நீர் கொட்டிக் கிடந்தாலும்
குடிநீர் குவளை அளவு !
நீர்மயம் எப்புறம் இருப்பினும்
தூயநீர் அருந்த பூமியில்
ஓர் துளி நீரிலை !
மண்டினி ஞாலத்தில்
உண்டி உயிர் கொடுத் தாலும்
குடிநீர் இல்லையேல்
முடிந்து விடும்  ஆயுள்  !

++++++++++++

[ஆகஸ்டு 27, 2012] [R-2]]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 120 other followers

%d bloggers like this: